மதுரை, பிப்.14- ஒன்றிய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்ச கத்தால் “கேலோ இந்தியா” நீச்சல் போட்டி கள் மத்தியபிரதேச மாநில போபாலில் பிப்ரவரி 6 முதல் 11 ஆம் தேதி வரை நடை பெற்றது. இதில் மொத்தம் 29 மாநி லங்களில் இருந்து 17 வயதிற்குப்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்ட னர். இதில் 400 மீட்டர் ப்ரீ ஸ்டைல் ரிலே போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இரண்டாமிடமும், எம்.மெட்லே ரிலே ( M.Medley Relay) போட்டியில் வெண்கல பதக்கம் வென்று மூன்றாமிடமும், ஒட்டு மொத்த புள்ளிகளின் அடிப்படையில் (Runner-up கோப்பையை) மதுரை சி. இ. ஒ. ஏ. பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவர் எஸ்.குணபாலன் இரண்டாமிடத்தை வென்றார். சி. இ. ஒ. ஏ. கல்வி குழுமத்தின் நிறு வனத் தலைவர் முனைவர் ராசாகிளை மாக்சு, தலைவர் சாமி, துணைத் தலை வர்கள் பாரதி பிரேம்சந்த், அசோகராஜ், முதுநிலை முதல்வர் கலா, முதல்வர் கௌரி ஆகியோர் மாணவர் குண பாலனை வாழ்த்தி, பாராட்டுக்களைத் தெரி வித்தனர்.