districts

img

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சிவகங்கையில் கையெழுத்து இயக்கம்

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சிவகங்கையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மதி தொடங்கி வைத்தார்..  மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன் தலைமை வகித்தார்.  மாநில துணைத் தலைவர் முத்துராமு, மாவட்ட செயலாளர் மோகன், மாவட்டத்தலைவர் வீரபாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.