districts

img

மயானப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி முற்றுகை

நத்தம், ஜூன். 4 திண்டுக்கல் மாவட்டம் நத்தம் புன்னப் பட்டிகிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும் பங்கள் வசித்து வருகின்றன.இந்த கிராமத்தில் பல ஆண்டுகளாக மயான பாதையை பயன் படுத்திவந்த நிலையில் தனிநபர் ஒருவர் இந்தப் பாதையை ஆக்கிரமித்துள்ளார். இந்த ஆக்கிரமிப்பை அகற்ற பலமுறை அதிகாரி களிடம் மனுக்கள் கொடுத்தும் எந்தவித நட வடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படு கிறது. இதனால் கோபமடைந்த அந்த கிராம மக்கள் வெள்ளியன்று வட்டாட்சியர் அலுவல கத்தை முற்றுகையிடவந்தனர். தகவலறிந்த நத்தம் காவல் ஆய்வாளர் ராஜசேகர் கிராம பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.அதன்பிறகு முற்றுகை கைவிடப் பட்டது..இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் ஒன்றிய செயலாளர்கள் மயில்ராஜ், முத்துமாணிக்கம், தொகுதி துணை செயலா ளர் தமிழ் முகம் மற்றும் கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்.