தேனி, ஜூலை 23- தேனி மாவட்டத்தில் கோயில், பள்ளி வளாகம் என காரணம் காட்டி அரசு மதுக்கடைகளை மூடிய இடத்தில் தனியார் மதுக் கடைகள் இயங்க அனு மதித்து, தனியார் மதுபார் உரிமையாளர்களுக்கு ஆத ரவாக விற்பனையை அதிக ரிக்க அரசு மதுக் கடையை மூடுவது போன்ற செயல் களில் ஈடுபட்டு வரும் டாஸ் மாக் நிர்வாகத்தைக் கண் டித்து சிஐடியு டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் சின்னமனூரில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. தேனி மாவட்டத்தில் கல்வி நிறுவனங்கள், வழி பாட்டு தலங்கள், மருத்துவ மனை, பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பகுதியில் உள்ள தனியார் மதுக்கூடங்களை அடைக்க வேண்டும் என வலி யுறுத்தி சின்னமனூர் ரவுண் டானா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் மாவட்ட துணைத் தலை வர் ஏ.லோகநாதன் தலைமை வகித்தார். சிஐடியு ஏரியா செயலாளர் எஸ்.பொம்மை யன், சி.வேல்முருகன், கே. விஜயபாண்டியன், பி.முரு கேசன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். சிஐடியு தேனி மாவட்டச் செயலாளர் எம்.ராமச்சந்திரன் கோரிக் கைகளை விளக்கி பேசி னார். சிஐடியு தேனி மாவட்ட தலைவர் டி.ஜெயபாண்டி, பொருளாளர் ஜி.சண்முகம், துணைத் தலைவர் ஏ.முருக வேல், டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் வி. மோகன், மாவட்ட செயலா ளர் எம்.பாலராஜன், எம்.முத்து கணபதி, வி.ராமு, பி.பூங்குன்றன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.