திண்டுக்கல், மார்ச்.24- திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசி ரியரை போக்சோவில் கைது செய்ய வலியுறுத்தி முதன்மைக் கல்வி அலுவலரிடம் இந்திய மாணவர் சங்கம் மனு கொடுத்துள்ளது. குஜிலியம்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேடசந்தூர் கல்வி மாவட்ட அலுவலர் கடந்த 18-ஆம் தேதி விசாரணை நடத்தியுள்ளார். விசாரணை நடத்தப்பட்டு 4 நாட்கள் ஆகியும் ஆசிரியர் மீது எந்த நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாணவர் சங்கம், வாலிபர் சங்கம், மாதர் அமைப்புகள் சார்பில் திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலு வலரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மனு அளித்தபோது மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் முகேஷ், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கே.ஆர்.பாலாஜி உள்ளிட்டோர் உட னிருந்தனர்.