தேனி, ஜன.2- தேனி அரசு சட்டக் கல் லூரி மாணவர்களுக்கு வழங்கியுள்ள இலவச பேருந்து வசதி போலத் தேனி மாவட்டத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரி- பாலிடெக்னிக் கல்லூரி களுக்கும் பேருந்து வசதி செய்துதர வேண்டும் .அரசுப் பள்ளிகளில் விடைத்தாள் கட்டணம் என்ற பெயரில் தொடர்ச்சியாக வசூல் செய் வதை நிறுத்த வேண்டும். பள்ளி- கல்லூரி மாணவிகள் மீதான பாலியல் குற்றங்க ளுக்கு எதிராகத் தனிச் சட்டம் இயற்ற வேண்டும். அரசுக் கல்லூரி மாணவிகள் தங் கும் விடுதிகளைக் கல்லூ ரிக்கு அருகில் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் துணைத் தலை வர் எஸ்.ஸ்ரீவர்த்தினி தலைமை வகித்தார். மாநிலத் துணைச் செயலாளர் ஜி.பாலா, மாவட்டச் செயலாளர் எம் . வேல்பிரகாஷ், மாவட்ட நிர்வாகிகள் ஆர்.சுந்தர வதனா, எஸ்.அழகுமதி, எம். ஐஸ்வர்யா, எம்.கன்னிகா, பி.சேகுவேரா, எஸ்.முத்தமி ழன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போராட் டத்தை வாலிபர் சங்க தேனி தாலுகா செயலாளர் டி.நாக ராஜன் வாழ்த்தினார். ஆர்ப் பாட்டத்தின் நிறைவில் ஆட்சியர் முரளீதரனைச் சந் தித்து மனு அளித்தனர்.