districts

img

இராமநாதபுரத்தில் எஸ்எப்ஐ தொடர் ஓட்ட விழிப்புணர்வு பிரச்சாரம்

இராமநாதபுரம், ஜன.2- மாணவர் சங்க அமைப்பு தினத்தை முன்னிட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் போதைப்பழக்கத்திற்கு எதிராக இந்திய மாணவர் சங்கத்தின் இராமநாதபுரம் மாவட்டக்குழு சார்பில் இராமநாதபுரம் ஆட்சி யர் அலுவலகம் முன்பு ஞாயி றன்று தொடர் ஓட்ட விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.  இப்பிரச்சாரம் பாரதி நகர் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், வழி விடு முருகன் கோவில் வழியாக சந்தை திடல் வந்தடைந்தது.  கடலாடி வட்டாட்சியர் சேகர் விழிப்புணர்வு தொடர் ஓட்டத்தை துவக்கி வைத்தார்.

மாணவர் சங்க மாநிலத் தலைவர் ஏ.டி. கண்ணன், மாநில துணைச்செய லாளர் ஜாய்சன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.  சந்தைத் திடலில் நடை பெற்ற விழிப்புணர்வு பொது மேடை பிரச்சாரத்திற்கு மாண வர் சங்க இராமநாதபுரம் மாவட் டச் செயலாளர் வசந்த் சுர்ஜித் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் வசந்த் முன்னிலை வகித்தார்.  கூட்டத்தில், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் கே. பாலபாரதி பேசுகையில், போதைப் பழக்கம் குடும்பங்களை சீரழிக்கிறது. 1985 ஆம் ஆண்டு போதை பொருள் தடுப்பு பிரிவு அமைக் கப்பட்டது. தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் 13.1 சதவீதம் அதிகரித்துள்ள தாக புள்ளி விவரங்கள் தெரி விக்கின்றன.  தமிழகத்தில் பெண்கள் சிறுமிகள் பாலியல் வன்கொடு மைக்கு ஆளாக்கப்படுகிறார் கள். தமிழகம் இக் கொடுமை யில் மூன்றாவது இடத்தில் உள் ளது.

இதற்கு எதிராக இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் வாலிபர்கள் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்த தொடர் ஓட்டத்தை நடத்தியிருப்பது பாராட்டுக்குரியது என்றார். இதில் மாணவர் சங்க உப குழு நிர்வாகி வில்லியம் ஜாய் சி, தாலுகா செயலாளர் அஜய் குமார், வியட்நாம், சிபிஎம் மாவட்ட செய லாளர் காசிநாத துரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குருவேல், தாலுகா செயலாளர் செல்வராஜ், மாவட்டக் குழு உறுப் பினர் வெங்கடேஷ், என்.ராம மூர்த்தி, பூமிநாதன், முத்துக் குமார், மாதர் சங்க மாவட்ட செய லாளர் இ.கண்ணகி மற்றும் மாவட்ட செயற்குழு மாவட்டக் குழு உறுப்பினர்கள் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.  சிலம்பாட்டம் பாடல்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சிறப் பாக நடைபெற்றது. இந்தத் தொடர் விழிப்புணர்வு ஓட்டத்தில் சிறுவர்கள், சிறுமிகள், மாணவ, மாணவிகள் 500க்கும் மேற்பட் டோர் உற்சாகத்துடன் பங்கேற்ற னர். ஓட்டத்தில் பங்கேற்றவர் களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.