இராஜபாளையம், ஜூன் 2- விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்டாட்சி யர் அலுவலகத்தில் ஜமாபந்தி எனும் கணக்குகளை தேர்வாணையம் ஒரு வாரகாலம் நடத்தப்பட்டது. ஜூன் 1 அன்று இறுதி நாளில் 360 மனுக்கள் பெறப்பட்டு 200 மக்களுக்கு தீர்வு காணப்பட்டது. சாத்தூர் கோட்டாட்சி யர் புஷ்பம் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ராஜபாளையம் வட்டாட்சியர் சீனிவாசன், துணை வட்டாட்சியர் கோதண்டராமன், தனி வட்டாட்சியர்கள், கிராம உதவியாளர்கள் கலந்துகொண்டு கணக்கு களை காட்டி சரிபார்க்கப்பட்டது. பட்டா, பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, விதவைகளுக்கான சான்றிதழ் உள்பட பல்வேறு திட்டங்களுக்கான ஆணை கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் சீனிவாசன் தலைமையில் வருவாய்த் துறையினர் செய்திருந்தனர்.