districts

மதுரை விரைவு செய்திகள்

கோவில்பட்டி ரயில் நிலையத்தில்  தனித்தனி டிக்கெட் கவுண்டர்கள் ஏற்படுத்துக!

சிபிஎம் கோரிக்கை

தூத்துக்குடி, மே 19- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  கோவில்பட்டி ரயில் நிலைய அதிகாரியிடம் அளித்த மனு விபரம் வருமாறு: தமிழகத்தில் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, தென்காசி ஆகிய இரு மாவட்  டங்களை இணைக்கக் கூடிய முக்கிய நகர மாக கோவில்பட்டி உள்ளது. இங்கு இருக்  கும் மக்கள் வெளியூர் செல்வதற்கு கோவில்  பட்டி ரயில் நிலையத்தையே அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் கோவில் பட்டி ரயில் நிலையத்திலிருந்து வெளியூர் சென்று வருகின்றனர். ரயில் நிலையத்தில் இருக்கும் டிக்கெட் கவுண்டர்களில் ஒரே  நேரத்தில் முன்பதிவு மற்றும் முன்பதி வில்லா டிக்கெட் எடுக்கும் நடைமுறை உள்  ளது. இதனால் முன்பதிவில்லா டிக்கெட் எடுத்து உடனடியாக பயணிக்கும் பயணி கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். மேலும்  கூட்டம் அதிகமாக இருப்பதால் டிக்கெட் எடுக்க முடியாமல் ரயிலில் ஏற முடியாமல் நிலைமை உருவாகிறது. எனவே, கோவில்பட்டி ரயில் நிலை யத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக இருந்ததைப் போல ரயிலில் முன்பதிவு செய்ய வருபவர்களுக்கு தனி கவுண்டர்களும் மற்றும் முன்பதிவில்லா டிக்கெட் எடுக்க வரும் பயணிகளுக்கு  தனி  கவுண்டர்களும் அமைக்கப்பட வேண்டும் என்று ரயில் நிலைய அதிகாரியிடம் மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மனு அளிக்கப்பட்டது. மேலும், ரயில் நிலையத்தில் வெளிப் புறம் பயணிகளை வழி அனுப்ப வருகை  தரும் நபர்கள் வாகனங்கள் நிறுத்திட எவ் வித இடையூறுமின்றி அனுமதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இது குறித்து ரயில்வே அதிகாரி ராஜேஷ் கூறும்போது கோவில்பட்டி ரயில் நிலை யத்தில் நிலைய மேலாளர் பொறுப்பு தற் போது கிடையாது என்றும் பொதுமக்கள் எந்தவித புகார் இருப்பினும் மதுரை மண் டல மேலாளரிடம் மட்டும் தெரிவிக்க முடி யும் என்றும் கூறினார். தங்களது கோரிக்கை கள் குறித்து மண்டல மேலாளர் அவர்களி டம் தெரிவிப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.  இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கோவில்பட்டி ஒன்றிய செயலா ளர் தெய்வேந்திரன் மற்றும் வாலிபர் சங்க  நிர்வாகி தினேஷ்குமார் ஆகியோர் இருந்த னர்.

மனைவி கொலை வழக்கில் கைதானவர் உட்பட  3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தூத்துக்குடி, மே 19- தூத்துக்குடியில் மனைவி கொலை வழக்கில் கைதானவர் உட்பட 3 பேர் வியா ழனன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.  தூத்துக்குடி பூபால்ராயர்புரம் பகுதி யைச் சேர்ந்த விஜி (40) என்ற பெண்ணை குடும்ப பிரச்சனை காரணமாக கொலை  செய்த வழக்கில் அவரது கணவரான கிருஷ்  ணன் (எ) ஆரோக்கிய சேவியர் மகன் சகாய வினோத் (38) என்பவரை கடந்த 19.04.2022  வடபாகம் போலீசார் கைது செய்தனர். இது போல் ஆறுமுகநேரி சீனந்தோப்பு விலக்கு  பகுதியில் ஓருவரை அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் வடக்கு  காமராஜபுரம் பகுதியை சேர்ந்த பெருமாள்  மகன் முருகன் (எ) பாம்பே முருகன் (47), ஆறுமுகநேரி காமராஜபுரம் பகுதியை சேர்ந்த யோவான் மகன் ஜெபராஜ் (27)  மற்றும் முத்து மகன் சதீஷ் (24) ஆகி யோரை ஆறுமுகநேரி போலீசார் கைது செய்தனர்.  மேற்கண்ட இவ்வழக்குகளில் தொடர்புடைய சகாய வினோத், முருகன் (எ) பாம்பே முருகன் மற்றும் ஜெபராஜ் ஆகிய 3 பேரையும் எஸ்பி பாலாஜி சர வணன் பரிந்துரையின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஆட்சி யர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். இதற்கான ஆணையை சம்பந்தபட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வழங்கினர். இந்த ஆண்டு  இதுவரை போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 23 பேர் உட்பட 100 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில டைக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதத்தில் 30 நாட்களில் 30 பேர் குண்டர் தடுப்பு சட் டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கம்பம் அருகே வரதட்சணைக் கொடுமையால் குழந்தை எரித்துக் கொலையில் குற்றவாளிகளை கைது செய்க!

மாதர் சங்கம் வலியுறுத்தல்

தேனி, மே 19- கம்பம் அருகே வரதட்சணைக் கொடுமை காரணமாக குழந்தை எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது .   கம்பம் அருகில் உள்ள நாராயணத்தேவன்பட்டி மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியகருப்பன்(60). இவர் திராட்சை தோட்டத்தில் கூலிதொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் அருண்பாண்டியன்(29). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சிவப்பிரியா(25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாகித்(2) என்ற ஆண் குழந்தை உள்ளது. மகன் காதல் திருமணம் செய்ததால் தனது மருமகளிடமிருந்து வரதட்சணை கிடைக்கவில்லை என்று அருண்பாண்டியன் குடும்பத்தினர் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளனர். சிவப்பிரியா ,இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தில நர்சாக வேலை பார்த்து வந்தார். வரதட்சணை கேட்டு மாமனார் பெரியகருப்பன், மாமியார் ஒச்சம்மாள் மற்றும் நாத்தனார் கனிமொழி ஆகியோர் தொடர்ந்து கொடுமைப்படுத்தியதால் மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.

 இதுதொடர்பாக மாமனார் பெரியகருப்பனுக்கும், சிவப்பிரியாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பெரியகருப்பன் தனது மருமகள் மற்றும் பேரன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிய தாய் மற்றும் மகனை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே 2 வயது குழந்தை உயிரிழந்தான். இதுகுறித்து ராயப்பன்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சிவப்பிரியாவிடம் தேனி மாஜிஸ்திரேட் முன்னிலையில் வாக்குமூலம் பெறப்பட்டது. அதில் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாகவும், தன் மீதும், தனது மகன் மீதும் பெட்ரோல் ஊற்றி மாமனார் எரித்ததாகவும் கூறினார். இதனைத்தொடர்ந்து ராயப்பன்பட்டி போலீசார் அருண்பாண்டியன் உள்பட 4 பேர் மீதும் வழக்குபதிவு செய்து பெரியகருப்பனை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். மாதர் சங்கம் கோரிக்கை  சம்பவத்தை அறிந்த மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சு.வெண்மணி ,மாவட்ட துணைச்செயலாளர் எஸ்.மீனா ஆகியோர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவப்பிரியா மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர் .பின்னர் இது குறித்து வெண்மணி கூறுகையில், வரதட்சணைக்காக கொடூர கொலை நடந்துள்ளது .இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நாகர்கோவிலில் நாளை மின் தடை

நாகர்கோவில், மே 19- கன்னியாகுமரி மாவட்டம் மீனாட்சிபுரம் துணைமின் நிலை யத்தில் புதிய மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) அமைக்கும் பணிகள் சனியன்று (மே 21) நடக்கிறது. எனவே, அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சண்முகம் தெரு, தாயகம் தெரு, வெள்ளாளர் காலனி ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது என நாகர்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை

திருநெல்வேலி, மே 19- நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகு தியில் தொடர்ந்து மழை பெய்து  வருகிறது. இதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள் ளது. மணிமுத்தாறு அணைக்கு  வியாழக்கிழமை நிலவரப்படி 226 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. தொடர்ந்து அணையின் நீர்பிடிப்பு பகு திகளில் மழை பெய்து வருவ தால் மணிமுத்தாறு அருவி யில் தண்ணீர் வரத்து அதி கரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணி களின் பாதுகாப்பு கருதி அரு வியில் குளிப்பதற்கு வனத் துறை தடை விதித்துள்ளது. அதே நேரத்தில் அருவியை  தொலைவில் இருந்து பார்வை யிட மட்டும் வனத்துறை அனு மதி வழங்கி உள்ளது.

பைக் விபத்து: முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பலி

தூத்துக்குடி, மே 19- எட்டயபுரம் அருகே பைக் விபத்தில் முன்னாள் பஞ்சா யத்து தலைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.  தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள கருப்பூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சித்தவன் (75). கருப்பூர் ஊராட்சிமன்ற முன்  னாள் தலைவரான இவர் புத னன்று புதூர் யூனியன் அலு வலகத்திற்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்  தார். வடக்கு முத்தலாபுரம் அருகே பைக் திடீரென  கவிழ்ந்து விபத்துக்குள்ளா னது. இதில் பலத்த காயம டைந்த அவர் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். இது குறித்து எட்டயபுரம் போலீ சார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்ற னர்.

முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நாகர்கோவில், மே 19- அடுத்த மாதம் 10 ஆம்தேதி வரை முத  லமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குமரி மாவட்ட அட்சியர் மா.அரவிந்த் தெரி வித்துள்ளார். இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதா வது: ஆண்டு தோறும் பன்னாட்டு அளவி லும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று  சிறந்து விளங்கும் 2 ஆண் மற்றும் 2 பெண்  விளையாட்டு வீரர்கள், 2 சிறந்த பயிற்று நர்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குநர் அல்லது உடற்கல்வி ஆசிரியர்களுக்கு முத  லமைச்சர் மாநில விளையாட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது. பரிசாக தலா ரூ.1 லட்சம், ரூ.10 ஆயிரம் மதிப்பிலான தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆகியவை ஒவ்வொரு நிதியாண்டிலும் வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துநர், ஒரு நிர்வாகி, ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர் (ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக நன்கொடை அளித்தவர்), ஒரு  ஆட்ட நடுவர், நடுவர், நீதிபதி ஆகியோ ருக்கு முதலமைச்சர் மாநில விளை யாட்டு விருதும் வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு ரூ.10 ஆயிரத்துக்கு மிகாமல் தங்கப்பதக்கமும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படுகிறது.  இவர்களுக்கு விருது வழங்குவதற்கு முந்தைய 2 ஆண்டு செயல்பாடுகள் கணக்  கில் எடுத்துக் கொள்ளப்படும். இந்த திட் டத்தின்படி 2021-2022ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன. விருதுக்கு விண்ணப் பிப்பவர்கள் தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளாக வசித்து 2 முறை தமிழ்நாடு அணியின் சார்  பாக கலந்துகொண்டு இந்தியாவின் சார்பாக விளையாடியவர்களாக இருக்க வேண்டும்.  தமிழ்நாட்டில் பணி நிமித்தமாக குறைந் தது 5 ஆண்டுகளாக வசித்து வரும் முப்  படை, ரெயில்வே, காவல், அஞ்சல் மற்றும் தொலை தொடர்புத்துறை மற்றும் இதர  துறைகளில் பணிபுரிபவர்கள் விண்ணப் பிக்கலாம். 2ஆவது முறையாக ஒரு நப ருக்கு இவ்விருது வழங்கப்பட மாட்டாது. ஒருவர் காலமாகும் பட்சத்திலும், இப் விருது வழங்கப்படும். விருதிற்கு முந்தைய  3 ஆண்டுகளில் விளையாட்டில் பெற்ற சிறந்த வெற்றிகள் இவ்விருதிற்காக கருத் தில் கொள்ளப்படும்.  விளையாட்டு வீரர்கள் தங்களது சான்றி தழ்களின் சான்றொப்பத்துடன் இணைத்தல் வேண்டும். விருதுக்கான விண்ணப்ப படி வம் மற்றும் விரிவான விதிமுறைகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் (www.sdat.tn.gov.in) மூலம் பெற்றுக் கொள்ளலாம்.  விண்ணப்பங்கள் அடங்கிய உறை மேல் ‘முதலமைச்சர் மாநில விளை யாட்டு விருதுக்கான விண்ணப்பம்” என்று  எழுதப்பட்டிருக்க வேண்டும். பூர்த்தி செய்யப் பட்ட விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை அலு வலகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி  நாள் 10-6-2022 ஆகும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனநலம் பாதித்த பெண் கொலை வழக்கில்  சிறுவன் உட்பட 2 பேர் கைது

தேனி, மே 19- தேனி மாவட்டம், கூடலூ ரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மர்மமான முறையில் இறந்துகிடந்த சம்பவத்தில், பாலியல் பலாத்காரம் செய்து அப்பெண்ணை கொலை செய்த 17 வயது சிறுவன் உட்  பட இருவரை காவல்துறை யினர் கைது செய்தனர்.  கூடலூர் - குள்ளப்ப கவுண்டன்பட்டி சாலையில் உள்ள நியாய விலைக் கடை அருகே கடந்த திங்கட்கிழமை 50 வயது மதிக்கத்தக்க மன நலம் பாதிக்கப்பட்ட மயில் என்ற பெண் அரை நிர்வாண மாக இறந்து கிடந்தார். அவ ரது தலை மற்றும் உடம்பில் காயங்கள் இருந்ததால் இது கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில், உத்தம பாளையம் கூடுதல் காவல்  கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா தலைமையில், தனிப்  படை அமைத்து தேடி வந்த னர். இதையடுத்து தனிப்  படை போலீசார், அப்பகுதி யில் இருந்த சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து  சம்பந்தப்பட்ட குற்றவாளி களை தேடினர்.  இந்நிலையில் திங்க ளன்று மாலை தனிப்படை யினர் கூடலூர் ஒட்டான் குளம் கண்மாய் கரையில் மது அருந்திக் கொண்டிருந்த குற்றவாளிகளை பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கூடலூரைச் சேர்ந்த முருகன்  மகன் அரவிந்குமார் (25), மற்  றும் கூடலூரைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் என்ப தும், இருவரும் ஒன்றாக கட்  டிட வேலைக்கு செல்பவர் கள், வேலை முடித்து வந்து மது அருந்துவது வழக்கம் என்றும், சம்பவத்தன்று இரு வரும் மது அருந்திவிட்டு போதையில், மனநலம் பாதித்த  பெண்ணை பாலியல் பலாத் காரம் செய்ய முயன்ற போது, அவர் சத்தம் போட்டதால் அங்கு கிடந்த கம்பால் அவரை தாக்கி, மயங்கி கீழே விழுந்ததும், பலாத்காரம் செய்து அருகே வீசிச் சென்  றது தெரியவந்தது. இதை யடுத்து இருவரையும் கைது செய்தனர். பாராட்டு  கொலை நடந்த 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடித்த தனிப்படை போலீசாரை, தேனி மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் பிர வின் உமேஷ் டோங்கரே பாராட்டினர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு  சொந்தமான  ரூ.1.36 கோடி இடம் மீட்பு

மதுரை, மே 19- மதுரை சிம்மக்கல் அனுமார்கோவில் படித்துறை அருகே  மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 1366 சதுர அடி பரப்பளவு கொண்ட  கட்டிடத்தை வணிக பயன்பாட்டிற்காக குணசேகரன் என்பவருக்கு கோயில் நிர்வாகம் சார்பாக வழங்கப்பட்டிருந்தது.  இந்நிலையில், அந்த இடத்தை புதனன்று  அதிகாரிகள் ஆய்வு செய்த போது, கோயில் இடத்தை சட்டவிரோதமாக ராஜேந்திரன் பயன்  படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த இடத்தை இரண்டு  பகுதிகளாக பிரித்து கழிப்பறை, குளியலறை கட்டணம் வசூல் செய்தும், உணவகம் அமைத்தும் நடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து அந்த இடத்திற்கு செலுத்த வேண்டிய வரி பாக்கி  3 லட்சத்து 91ஆயிரத்து 768 ரூபாயை செலுத்தக் கோரி கோயில் நிர்வாகத்தின் சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.  கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வணிக பயன்பாட்டிற்கு உள்வாடகைக்கு விட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து  அங்கு சென்ற கோயில் அதிகாரிகள் 1 கோடியே 36 லட்சம் மதிப்பிலான 1366 சதுர அடி பரப்பளவு கொண்ட இடத்தை மீட்டனர். மேலும் அந்த கடை களுக்கு சீல் வைத்து அங்கு உள்ள அறையில் இருந்த ஒரு அடி நீள பித்தளை சூலம், கையடக்க கலசம், விபூதி கொப்பரை ஆகியவற்றை மீட்டுச் சென்றனர். 

கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு: 2 பேர் சஸ்பெண்ட்

சிவகங்கை, மே 19- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் கீழப்பசலை தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் நகை கடன் தள்ளுபடியில் நடைபெற்ற முறைகேடு தொடர்  பாக இருவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கீழப்பசலை தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் நகை கடன் போலியான நபர்கள் பெயரில் வைத்து  அதை தள்ளுபடி கணக்கில் கொண்டு வந்திருக்கிறார்கள். இதுதொடர்பாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். அதா வது 300 நபர்கள் நகை அடமான கடன் பெற்று இருக்கி றார்கள். இதில் 197 நபர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி என்று பட்டியல் ஒட்டப்பட்டிருக்கிறது. நகையை அடமானம் வைத்து கடன் பெற்ற மற்றவர்கள் நகையை திருப்புவதற்கு விபரம் கேட்க வந்தால் வங்கியை பூட்டிவிட்டு சென்று விடுவதாக தெரியவருகிறது. தினம்தோறும் நகையை அடமானம் வைத்து நகையைத் திருப்ப முடியாது அவர்கள் காத்துக் கிடக்கின்றனர். இதுதொடர்பாக வங்கியின் செயலாளரும் கணினி  ஆபரேட்டரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள தாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக முழு  விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மானாமதுரை ஒன்றியச் செயலா ளர் ஆண்டி வலியுறுத்தியுள்ளார்.

அடையாளம் தெரியாத வாகனம் மோதி லாரி டிரைவர் சாவு

திருநெல்வேலி, மே 19- பணகுடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி டிரைவர் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் பனச்சமூடு பகுதியை சேர்ந்தவர் விபின்  (வயது 34). லாரி டிரைவர். இவரது லாரியை பழுது பார்ப்பதற்காக நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியில் உள்ள ஒரு ஒர்க்‌ஷாப்பில் நிறுத்தியிருந்தார். இந்நிலையில் புதன்கிழமை மாலையில் அந்த லாரியை எடுப்பதற்காக காவல்கிணறு பஸ் நிலையத்தில் இருந்து நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக சென்ற ஒரு  அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் அவர் சம்பவ இடத்தி லேயே பலியானார். போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.