மதுரை நகர சபைகளில் மக்கள் கோரிக்கை
மதுரை, நவ.1- ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். சாலை,தெரு விளக்குகளை சீரமைக்க வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மதுரை நகர சபை கூட்டங்களில் மக்கள் முன் வைத்தனர். மதுரை மாநகராட்சி சார்பில் மாமன்ற உறுப்பினர்கள் தலை மையில் பொதுமக்களின் கோரிக் கைகள் கேட்டறியும் நகர சபைக் கூட்டம் நவம்பர் 1 ஆம் தேதி செவ் வாயன்று பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. மண்டலம் - 3 , 57 ஆவது வார்டு ஆரப்பாளையம் மந்தை பகுதியி லும் 76 ஆவது வார்டு திடீர் நகர் சமு தாய கூடத்திலும் மேயர் வ.இந்தி ராணி தலைமையில் நகரசபை நடைபெற்றது இதில் மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, துணை ஆணையாளர் முஜிபூர் ரகுமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பொதுமக்களிடம் அடிப்படை பிரச்சனைகளை கேட்டறிந்தனர்.
துணை மேயர் தி.நாகராஜன் தலைமையில் 80 ஆவது வார்டு சமுதாயக் கூடத்தில் நகரசபை நடை பெற்றது. வார்டு பொதுமக்கள் கூறு கையில், பாதாளச் சாக்கடை கழிவு நீர் தெருப் பகுதியில் தேங்குவதை தடுக்க வேண்டும். தெருவிளக்கு களை சீரமைக்க வேண்டும். ஆரம்ப சுகாதார மையம் அமைக்க வேண் டும். சுந்தர்ராஜபுரம் மருத்துவ மனையில் மகப்பேறு தாய்மார் கள் அதிக அளவில் சிகிச்சைக்கு வருகின்றனர்.சுந்தர்ராஜபுரம் மாநகராட்சி மகப்பேறு மருத்துவ மனையில் ஸ்கேன் எடுக்கும் இயந் திரத்தை புதிதாக அமைத்துக் கொடுக்க வேண்டும். தெருப்பகு திகளில் உள்ள சாலைகளை சீர மைக்க வேண்டும் என்று வலி யுறுத்தினர். மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் மற்றும் சுகா தாரத் துறை ஆய்வாளர் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். 23 ஆவது வார்டு செல்லூர் 60 அடி சாலையில் மாமன்ற உறுப்பி னர் அலுவலகத்தில் மாமன்ற உறுப்பினர் டி. குமரவேல் தலை மையில் நகரசபை நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பேசுகையில், பாதாளச் சாக்கடையை தூர் வாருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பல்வேறு இடங்களில் பாதாளச் சாக்கடை மூடிகள் உடைந்துள்ளன. அதை உடனடியாக மாற்ற வேண்டும். குடிநீரில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும், பாக்கியநாத புரம் தெரு பகுதிகளில் சாலைகள் அமைக்க வேண்டும் என்று கோரிக் கைகளை முன்வைத்னர். மண்ட லம் 2 உதவி பொறியாளர் மரகத வல்லி மற்றும் வார்டு இளநிலை பொறியாளர் கதிர்வேல் ஆகி யோர் கலந்து கொண்டனர்.