districts

img

‘கலைஞர் எழுதுகோல் விருது’: மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் தேர்வு

சென்னை, ஜூன் 2- மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதனுக்கு ‘கலைஞர் எழுது கோல்’விருதை முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக் கிழமை (ஜூன் 3) வழங்கு கிறார். ‘கலைஞர் எழுதுகோல் விருது’க்கான தேர்வுக் குழுவின் பரிந்துரை யின்பேரில் 2021-ஆம் ஆண்டி ற்கான விருதாளராக மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முக நாதன் (87) தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டத்தில் பிறந்த ஐ.சண்முகநாதன்  1953 ஆம் ஆண்டு ‘தினத்தந்தி’ யில் உதவி ஆசிரியராகப் பொறுப்பேற்று இது நாள்வரை ஏறத்தாழ 70 ஆண்டுகளாகப் பத்திரிகைத் துறையில் பணிபுரிந்து வரு கிறார்.  பெரும் மக்களுக்கான இதழியலில் இவ்வளவு நெடிய பணி அனுபவம் என்பது எளிதில் நிகழ்த்தற் கரிய சாதனை ஆகும். அவருடைய முக்கியமான பங்களிப்புகளில் ஒன்று, தினத்தந்தி குழுமத்தினால் வெளியிடப்பட்ட ‘வர லாற்றுச் சுவடுகள்’நூல் தொகுப்புப் பணி ஆகும். பல்லாயிரம் பிரதிகள் விற்ற இந்நூலானது, சமகால வர லாற்றைப் பார்க்க உதவு கிறது.