நாகர்கோவில், ஜூன் 30- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கிருஷ்ணன்கோவில் முன் னாள் கிளை செயலாளர். ஐக்கிய கைத்தறி நெசவுத் தொழிலாளர் சங்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவர் மூத்த தோழர் எஸ் மணி (80) சென்னையில் காலமானார். அன்னாருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்வியா ழனன்று காலை கிருஷ்ணன் கோவில்அலுவலகம் முன் மாவட்டத் தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. செயலாளர் இலட்சுமி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ் அநதோணி .மாநகர குழு உறுப்பினர் தாமோதரன், ராதாமணி மற்றும் பலர் கலந்து கொண் டனர்.