திண்டுக்கல், டிச.30- திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் பி.ஏ.கருப்ப ணன் வியாழனன்று காலமானார். தோழர் பி.ஏ.கருப்பணன், கட்சி யின் மாவட்டக்குழு உறுப்பினராக, ரெட்டியார்சத்திரம் ஒன்றிய செயலாள ராக, கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகியாக, தமிழ்நாடு விவசாயி கள் சங்க நிர்வாகியாக செயல்பட்டவர். அன்னாரது மறைவுச் செய்தியறிந்து கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர்கள் கே.பாலபாரதி, என்.பாண்டி, மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், மற்றும் பி.கே.கருப்புசாமி, எம்.ஆர்.முத்துச்சாமி, பி.செல்வராஜ், கே.ஆர்.கணேசன், சி.குணசேகரன், பி.வசந்தாமணி, டி.முத்துச்சாமி, கம லக்கண்ணன், ராணி, ராமசாமி, இடைக்கமிட்டி செயலாளர் சக்திவேல் மற்றும் தோழர்கள் அவரது உடலுக்கு மாலை யணிவித்து அஞ்சலி செலுத்தினர். ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் புதுப்பட்டி அருகில் சிறு நாயக்கன்பட்டியில் உள்ள அவரது தோட்டத்தில் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது.