districts

img

மூத்த தோழர் அனந்தப்பன் செங்கோல் காலமானார்

ர் தேனி, நவ.8- தேனி மாவட்டம் உத்தமபாளை யம் ஒன்றியம் கோம்பையைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னணி தோழர் அனந்தப் பன் செங்கோல் (74) திங்களன்று காலமானார்.  கட்சியின் கிளைச் செயலாள ராகவும், தீக்கதிர் நாளிதழ் விநியோ கஸ்தராகவும் திறம்பட பணி செய்த செங்கோல் உடல் நலக்குறைவு காரணமாக ஓய்வு எடுத்து வந்தார். கட்சி நடத்திய பல்வேறு இயக்கங்களில் கலந்து கொண்டு முன்னணி தோழராக விளங்கினார்.  இந்நிலையில் திங்களன்று காலமானார். இறுதி நிகழ்ச்சி கோம்பையில் செவ்வாயன்று நடைபெற்றது. இதில், கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணா மலை, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் டி.வெங்க டேசன், சி.முருகன், பாளையம் ஏரியா செயலாளர் எஸ். சஞ்சீவிகுமார், தேவாரம் ஏரியா செயலாளர் டி.ராஜா, பண்ணைப்புரம் பேரூராட்சி துணைத் தலைவர் எஸ்.சுருளிவேல், சிஐடியு தலைவர் டி.கே.சீனிவாசன் உள் ளிட்டோர் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினர்.