திருவாரூர், மே 6- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 40- ஆவது அமைப்பு தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம், அமைப்பு தின விழா திரு வாரூரில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்டத் தலைவர் வே.சோமசுந்தரம் தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் செ.பிரகாஷ் வர வேற்றார். அரசு அனைத்து மருந்தாளுனர் சங்க பொதுச் செயலாளர் உ.சண்முகம் கருத் தரங்கை துவக்கி வைத்தார். மாவட்டப் பொருளாளர் செ.செங்குட்டு வன் நன்றி கூறினார். முன்னாள் மாநிலச் செய லாளர் எம்.சௌந்தரராஜன், மாநிலச் செயலா ளர் எஸ்.கோதண்டபாணி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். இதேபோல், நீடாமங்கலம் வட்ட கிளை சார்பில் கொரடாச் சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாவட்ட துணை தலைவர் கே.எஸ்.செந்தில் அமைப்பு தின கொடியேற்றினார். குடவாசலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வட்டச் செயலாளர் கே. அன்பழகன் தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் கே. பாலசுப்ரமணியன் கொடி ஏற்றினார். மாவட்ட துணைத் தலைவர் வி.தெட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாகப்பட்டினம் நாகப்பட்டினம் நடைபெற்ற நிகழ்வில் மாவட்டத் தலைவர் பா.ராணி தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் அ.தி.அன்பழ கன், உள்ளாட்சி நிதித் தணிக்கை பணிமன்ற மாநிலத் தலைவர் பெ.அம்பேத்கர், மாநிலச் செயலாளர் சா.டானியல் ஜெயசிங், தொழிற் சங்க கூட்டமைப்பு தலைவர் சு.சிவகுமார், மாவட்ட மகளிர் துணைக்குழு ஒருங்கிணைப் பாளர் வி.சித்ரா, மாவட்டப் பொருளாளர் ப. அந்துவன்சேரல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.