districts

img

இராமநாதபுரத்தில் மிளகாய் ஏற்றுமதி அதிகரிப்பு கருத்தரங்கம்

நத்தம் அருகே தனியார் பேருந்து மோதி தொழிலாளி பலி நத்தம், ஜன.4- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டியை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் சங்கர்,ஓட்டுநர். அதே  பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(19), பேக்கரி தொழி லாளி. இவர்கள் இருவரும் திண்டுக்கல்லுக்கு இருசக்கர  வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். வாகனத்தை சங்கர் ஓட்டினார். எர்ரமநாயக்கன்பட்டி பிரிவில் திண்டுக்கல்லில் இருந்து பொன்னமராவதி நோக்கி சென்ற தனியார் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில்  இருவரும் தூக்கிவீசப்பட்டனர். பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மணிகண்டன் சம்பவ இடத்திலே பலி யானார். சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் போலீசார்  இறந்தவரின் பிரேதத்தை கைப்பற்றி நத்தம் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம டைந்த சங்கர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வருகிறார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்  ஆய்வாளர் தங்கமுனியசாமி வழக்குபதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார். ஓடையில் அனுமதியின்றி  மணல் அள்ளியவர் கைது  திருவில்லிபுத்தூர், ஜன.4-  விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே திரு வண்ணாமலை கிரிவலப் பாதை அருகே ஓடையில் அரசு  அனுமதி இன்றி மணல் அள்ளுவதாக திருவில்லிபுத்தூர் நகர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.  இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர், மணல் அள்ளிக்கொண்டிருந்த மங்காபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன், ராகவன் கருப்பசாமி, கார்த்தி தவசி உட்பட  ஆறு பேரை பிடித்தனர்.  வழக்கு பதிந்து ராகவன் என்ப வரை மட்டும் கைது செய்து நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி. நீதிமன்ற காவலில் அடைத்தனர்.  மற்ற வர்கள் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். சாத்தூரில் சமையல் எரிவாயு  கசிந்து விபத்து: முதியவர்  பலி சாத்தூர், ஜன.4- சாத்தூரில் சமையல் எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் முதியவர் உயிரிழந்தார். சாத்தூரைச் சேர்ந்தவர் சிவசாமி (61). இவர் வீட்டில்   தனியாக வசித்து வந்த நிலையில் சமையல் எரிவாயு உரு ளையில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதை அறியாமல் சிவசாமி  அடுப்பை பற்ற வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதை யடுத்து, அங்கு  தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் சிவசாமி உடல் கருகிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமிக்கு பாலியல் தொந்தரவு  கொடுத்தவருக்கு 5 ஆண்டு சிறை   திருவில்லிபுத்தூர், ஜன.4- விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே  காரியாபட்டி தாலுகா அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்த வர்  கோபால் (வயது 26). திருமணமான இவருக்கு குழந்தை கள் உள்ளன.  கடந்த ஆண்டில் காட்டுப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 11 வயது சிறுமிக்கு கோபால் பாலியல் தொந்தரவு கொடுத்தார். இது குறித்து பாதிக்கப்பட்ட தரப்பினர் தந்த புகாரின் பெயரில் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து கோபாலை கைது செய்தனர்.  திருல்லிபுத்தூரில் உள்ள சிறார் பாலியல் குற்றத் டுப்பு அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  வழக்கினை விசாரித்த நீதிபதி கே.பூர்ண ஜெய ஆனந்த்  குற்றம் சாட்டப்பட்ட கோபாலுக்கு 5 வருடம் சிறை தண்ட னையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித் தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு  குற்றவியல் வழக்கறிஞர் ஜெ.கலா ஆஜரானார். இராமநாதபுரத்தில் மிளகாய் ஏற்றுமதி அதிகரிப்பு கருத்தரங்கம்  இராமநாதபுரம், ஜன.4-   இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், அபிராமத்தில் ஜனவரி 4 அன்று தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் மிள காய் ஏற்றுமதி அதிகரித்தல் குறித்த விவசாயிகளுக்கான ஒருநாள் கருத்தரங்கம்  நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர்   ஜானி டாம் வர்கீஸ் தலைமையேற்று கருத்தரங்கை துவக்கி வைத்து உரையாற்றினார். ஆட்சியர் பேசுகையில், இராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்த வரை மிளகாய், பருத்தி, விவசாயத்தில் சிறந்து விளங்குகின்றனர். அதி லும் இராமநாதபுரம் மாவட்ட மிளகாய்க்கு எப்பொழுதுமே தனி வர வேற்பு உண்டு. இத்தகைய நிலையில் பல்வேறு இடங்களுக்கு மிளகாய் ஏற்றுமதி செய்யும் வகையில் பல நிறுவனங்கள் கொள்முதல் செய்ய தயாராக உள்ளனர். இத்தகைய நிலையில் மிளகாய் விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை நல்ல விலைக்கு விற்ப தற்கு அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடம் மாவட்டத்தில் 6 இடங்க ளில் செயல்படுத்தி வருகின்றன. அந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து சந்தைப்படுத்தி உரிய விலைக்கு விற்பனை செய்து பயன்பெற ஆர்வம் காட்ட வேண்டும். விலை குறைவான நேரங்க ளில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பொருள்களை இருப்பு வைத்து விலை ஏற்றம் வரும்பொழுது விற்பனை செய்து பயன்பெறலாம். அதே போல் பல்வேறு தனியார் நிறுவனங்கள் அதிகளவு மிளகாய் கொள் முதல் செய்ய முன்கூட்டியே விவசாயிகளிடம் ஒப்பந்தம் செய்திட முன்  வருகிறார்கள். அது போன்ற நிலைகளையும் விவசாயிகள் பயன்படுத்தி அவர்களுக்கு தேவையான வகையில் பொருள்களை உற்பத்தி செய்து விற்பனை செய்திடும் வகையில் விவசாயிகள் திட்டமிட்டு செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்படும்பொழுது உரிய விலை கிடைப்பதுடன் உற்பத்தி பொருள்களும் விற்பனை ஆகின்றன. எனவே விவசாயி கள் இதுபோன்ற கருத்தரங்கங்களில் பங்கேற்று தகுதியான நிறு வனங்களை தேர்வு செய்து பயன்பெற்றிட வேண்டும் என்று தெரி வித்தார். இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர்  நாக ராஜன்  கமுதி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் போ.தமிழ்செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.