districts

img

தென்னை விவசாயிகளுக்கான கருத்தரங்கம்

திருவில்லிபுத்தூர் அக் 6- திருவில்லிபுத்தூரில் தென்னை வளர்ச்சி வாரியம், தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை சார்பில் விருதுநகர் மாவட்ட தென்னை விவசாயிகளுக்கு தென் னையில் அறிவியல் சாகுபடி தொழில்நுட்பம் மற்றும் மதிப்பு கூட்டல் குறித்து கருத்தரங்கு நடைபெற்றது.  நிகழ்வில், தென்னை வளர்ச்சி வாரி யத்தின் இயக்குநர் அறிவாளி, திருவில்லி புத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தனலட்சுமி, விருதுநகர் வேளாண்மை இணை இயக்குநர் பத்மாவதி, பருத்தி ஆராய்ச்சி நிலைய தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர்  வீரபத்திரன், பேராசிரியர் தங்கபாண்டியன், வேளாண் விற்பனை துறை வேளாண்மை அலுவலர் மகாலட்சுமி, இராஜபாளையம் ஒழுங்குமுறை விற்பனை விற்பனைக் குழு கண்காணிப்பாளர் உமா மகேஸ்வரி, தென்னை வளர்ச்சி வாரத்தின் கள அலு வலர் முருகானந்தம், செயல் அலுவலர் பாரதி பிரியன் ஆகியோர் பேசினர்.  இதில், இராஜபாளையம், திருவில்லி புத்தூர், வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்த  நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.