districts

புராதனப் பொருட்கள் விற்கும் கடைகளை விரைவில் திறந்திடுக!

மதுரை, டிச.8-  மீனாட்சியம்மன் கோவில் அருகில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புராதனப் பொருட்கள் விற்கப்படும் கடை விரைவில் திறந்து வியா பாரம் செய்வதற்கு கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கடைக்காரர்கள் சங்கம் சார்பில் வெள்ளியன்று ஆணையாளரிடம் மனு அளிக்கப் பட்டது. இதுதொடர்பாக சங்கத்தின் தலைவர் எஸ்.ராஜநாகுலு,  செயலாளர் ஆர்.கண்ணன், பொருளாளர் ஜி.ஆனந்தகண் ணன் மற்றும் நிர்வாகிகள் ஆணையாளரிடம் மனு அளித்தனர். 

மனுவில், ‘‘மதுரை மீனாட்சியம்மன் கோவில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கோவில் கடைக்காரர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அறநிலையத்துறையின் பரிந்துரையின்படி முன்னுரிமை வழங்கி 24.01.2022 நடைபெற்ற ஏலத்தில் தரைத்தளத்தில் 52 கடைகள் ரூ.6 லட்சம் டெபாசிட் தொகை செலுத்தி மதுரை மாநகராட்சியால் ஒதுக்கப்பட்டு ஸ்மார்ட் சிட்டி மல்டி லெவல் கார் பார்க்கிங்கில் புராதனப் பொருட்களை விற்கும் கடைகள் அனைத்தும் முழுமையாக கட்டிடப் பணிகள் முடிவ டைந்துவிட்டது என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.