மதுரை, மே 5- மதுரையில் பல்வேறு பகுதி களில் பெட்டிக் கடை போல் புதி தாக முளைத்துள்ளது சிக்கன் ஷவர்மா கடைகள். இதில் சில கடைகளில் பழைய கோழிக்கறி அல்லது முதல் நாள் விற்பனை யாகாமல் குளிர்சாதனப் பெட்டி யில் மசாலா தடவி வைத்த கோழிக் கறிகளை மறுநாள் பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து உணவு பாது காப்பு துறைக்கு சில புகார்கள் வந்த நிலையில் வியாழனன்று அதிரடியாக சோதனையிட்டனர். மதுரை மாவட்டத்தில் உள்ள 52 கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஜெயராம் தலை மையிலான குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். இதில், 10 கிலோ பழைய சிக்கன் கறிகள் பறிமுதல் செய்யப்பட்டும் 5 கடைகளுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளனர். மேலும் சிக்கன் ஷவர்மா கடை களில் பழைய சிக்கன் கறிகளை பயன்படுத்தக்கூடாது, சமைத்த உணவுப் பொருட்களை ப்ரீட்ஜ ரில் வைக்கக் கூடாது, உணவுப் பொருட்களில் வண்ணம் சேர்த் தால் கடும் நடவடிக்கை என எச்ச ரிக்கை விடுத்துள்ளனர்.