அறிவியல் கருத்தரங்கம்
சிவகங்கை,மே 13- சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் பூலாங் குறிச்சியில் உள்ள வி.எஸ்.எஸ்.அரசு கலைக்கல்லூரி முதுகலை வேதியியல் துறையின் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் முத்துசாமி தலைமை வகித்தார். வேதியியல் துறையின் தலைவர் முனைவர் ரமாதேவி முன்னிலை வகித்தார். மாணவி ஷோபனா வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி நோக்கவுரையாற்றினார். மாவட்டத் தலைவர் முனைவர் கோபிநாத், மாவட்ட பொருளாளர் ரகுநாதன் ஆகியோர் கருத்துரையாற்றினர். மாநில பொறுப்புசார் செயலாளர் பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். மாணவி விஜய சாந்தி நன்றி கூறினார். பல்வேறு துறை பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
துப்பாக்கியை தனி நபரிடம் கொடுத்த 2 போலீசார் சஸ்பெண்ட்
விருதுநகர்,மே.13- விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள நாருகா புரத்தைச் சேர்ந்த ஜான்பாண்டியன்- முருகலெட்சுமி ஆகியோர் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் மூன்று மாத கர்பிணியான முருகலெட்சுமி கடந்த மாதம் உடல் கருகிய நிலையில் உயிரிழந்தார். இது தொடர்பாக அப்பெண்ணின் உறவினர்கள், ஜான்பாண்டியன் குடும்பத்தினர் கொலை செய்ததாக புகார் தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட னர். அதை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ஜான்பாண்டியனை இருக்கன்குடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சில தினங்களுக்கு முன்பு ஜான் பாண்டியனை இருக்கன்குடி போலீசார், விருதுநகர் நீதி மன்றத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது பாது காப்பிற்காக வந்த காவலர்களான அன்பரசன், ஆறுமுக வேல் ஆகியோர் இயற்கை உபாதையை கழிப்பதற்காக துப்பாக்கிகளை, நீதிமன்றம் எதிரே கடையில் அமர்ந்தி ருந்த இருக்கன்குடியைச் சேர்ந்த தமிழக மக்கள் முன் னேற்றக் கழக மாவட்ட இளைஞரணி செயலர் மாடேஸ்வ ரன் (30) என்பவரிடம் கொடுத்துள்ளனர். இதையடுத்து, மாடேஸ்வரன் துப்பாக்கிகளை சுய படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளார். இத்தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம். மனோகர், சம்பந்தப்பட்ட இருக்கன்குடி காவல் நிலைய போலீசார் அன்பரசன், ஆறுமுகவேல் ஆகியோரை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
மலிவான அரசியல் செய்கிறார் அண்ணாமலை துரை வைகோ கடும் சாடல்
விருதுநகர், மே.13- பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் அர்ஜூன் சம்பத் போன்றவர்கள் தமிழகத்தில் மலிவான அரசியல் செய்கின்றனர் என மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ கடுமையாக சாடினார். சாத்தூர் அருகே சாலை விபத்தில் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவியை சந்தித்து ஆறுதல் கூறிய பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது துரை வைகோ கூறியதாவது பிரதமரின் திட்டங்களில் முறைகேடு நடக்கிறது ஆகையால் ஒவ்வொரு தாலுகாவிலும் பாஜக சார்பில் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது குறித்த கேள்விக்கு குறைகளை அரசு நிவர்த்தி செய்து வருகிறது. ஏதேனும் தவறுகள் இருப்பின் அதிமுகவோ,பா.ஜ.க.வினரோ சுட்டிக் காட்டலாம் அதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு. அதைவிடுத்து மாநில சுயாட்சியை தவிடு பொடி ஆக்கும் வகையில் ஒன்றிய அரசின் மூலமாக இவர்களாகவோ போலியாக ஒரு அரசாங்கம் நடத்த முயற்சிக்கிறார்கள்.அவ்வாறு நடக்க கூடாது. திராவிட கட்சிகள் அரசியல் மட்டுமே செய்கின்றன என்று அர்ஜூன் சம்பத் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு, அர்ஜூன் சம்பத் மற்றும் அண்ணாமலை ஆகியோரின் அறிக்கைகளை பார்க்கும்பொழுது மலிவான ஒரு அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர் என தெளிவாகத் தெரிகிறது. இலங்கையில் தற்போதைய சூழ்நிலையை பயன்படுத்தி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஒன்றிய பாஜக அரசு தமிழக மீனவர்கள் பிரச்சனையை சரி செய்ய வேண்டும். கச்சத்தீவை மீட்கும் நடவடிக்கையை எடுக்க வேண்டும். மீட்க இயலாவிட்டாலும் கச்சதீவை சுற்றியுள்ள பகுதிகளில் மீன் பிடிக்கும் உரிமையை வாங்கித் தர வேண்டும். இதில் அரசியல் எதுவும் கிடையாது. பாஜக தலைவர் அண்ணா மலைக்கு நான் கூறிக் கொள்வது என்னவென்றால் குற்றச்சாட்டுகளை குறைகளை கூறலாம்.ஆனால் அவதூறு பரப்புவது, மலிவான அரசியல் செய்வது கூடாது என தெரிவித்தார்.
நகைப்பறிப்பில் ஈடுபட்ட 3 பேர் கைது
பழனி,மே 13- பழனி நகரம் லட்சுமிபுரத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு தங்கப்பொண்ணு என்பவ ரின் கழுத்தில் இருந்த 3 பவுன் செயினை நபர் ஒருவர் பறித்துக்கொண்டு உடன்வந்த நபருடன் இருசக்கர வாகனத்தில் தப்பி விட்டார். இதில் பாதிக்கப்பட்ட பெண் பழனி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவா சன் உத்தரவின்பேரில், தனிப்படை அமைக் கப்பட்டு கொள்ளையர்களை தேடி வந்தனர். இதில் மதுரையைச் சேர்ந்த தனபாண்டி, விக்னேஷ் மற்றும் சிவகிரிபட்டியை சேர்ந்த ரஞ்சித்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 3 பவுன் செயினையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
விழிப்புணர்வு கருத்தரங்கு
திருவில்லிபுத்தூர், மே 13. திருவில்லிபுத்தூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் / நுகர்வோர் நீதிபதி சேகர் தலைமையில் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இக் கருத்தரங்கில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் உறுப்பினர்கள் கே.சௌந்தரராஜன் மற்றும் சாந்தி ஆண்டியப்பன் சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள், நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையத்தின் மாநில தலைவர் சுப்பிர மணியன் மற்றும் அலுவலக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தமுஎகச திருத்தங்கல் கிளை மாநாடு
சிவகாசி, மே.13- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருத்தங்கல் கிளை மாநாடு பல்வேறு கலை நிகழ்ச்சியுடன் நடைபெற்றது. தமுஎகச திருத்தங்கல் கிளை மாநாடு கரகாட்டம், தேவ ராட்டத்துடன் துவங்கியது. பின்பு, கற்குவேல், பிரேமா ஆகியோரின் சிலம்பாட்டம் நடைபெற்றது. துவக்கி வைத்து மாவட்ட துணைத் தலைவர் பெ.ரவீந்திரன் பேசி னார். மாவட்டத் தலைவர் தேனிவசந்தன், ஆசிரியர் கா.சிவபெருமான், கஸ்தூரி சேது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் மாவட்ட செயலாளர் லட்சுமி காந்தன் சிறப்புரையாற்றினார். புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. கிளைத் தலை வராக மு.முத்துச்சாமி, செயலாளராக பு.மா.பெரிய நாயகம், பொருளாளராக எஸ்.எம்.முருகேசன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாதர் சங்க விருதுநகர் மாநாடு
விருதுநகர், மே.13- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் விருதுநகர் நகர 4 ஆவது மாநாடு நடைபெற்றது. தியாகி சந்துரு நினைவகத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கு கு ஜெயா, அங்காள ஈஸ்வரி மகாலட்சுமி ஆகியோர் தலைமை தாங்கினர். வேலை அறிக்கையை இராஜேஸ்வரி முன் மொழிந்தார். துவக்கி வைத்து மாவட்ட தலைவர் என்.உமா மகேஸ்வரி பேசினார். ஆலமரம் அமைப்பின் ஒருங்கி ணைப்பாளர் புஷ்பராஜ் வாழ்த்துரை வழங்கினார். மாநில செயலாளர் எஸ்.லட்சுமி நிறைவுரையாற்றினார். புதிய நிர்வாகிகள் தேர்வு : நகரத் தலைவராக ஐ. ஜெயா, செயலாளராக இராஜேஸ்வரி, பொருளாளராக ஆர்.வளர்மதி ஆகியோர் உட்பட 11 பேர் கொண்ட நகர்க் குழு தேர்வு செய்யப்பட்டது.முருகேஸ்வரி நன்றி கூறினார்.
வழிப்பறியில் தேடப்பட்ட இருவர் கைது
மதுரை, மே 13- மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்த வெங்க டேஷ்வரி என்பவர் காமராஜர் சாலையில் நின்றிருந்த போது, அடையாளம் தெரியாத நபர் அவரது கழுத்தில் இருந்த ஏழரை பவுன் தங்க தாலிச்செயினை அறுத்துக் கொண்டு நண்பருடன் இருசக்கர வாகனத்தில தப்பி ஓடினார். சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்ததில் யா. ஒத்தக்கடை அல்லு நகர் பகுதி சரவணக்குமார் மகன் செல்வஸ்ரீவர்ஷன் (21) , வீரகாளி யம்மன் கோவில் தெரு பூமிநாதன் மகன் செண்பக மூர்த்தி (28) ஆகியோர் தாலிச்செயினை பறித்தது தெரிய வந்தது. ஒத்தக்கடை பகுதியில் பதுங்கியிருந்த இவர்களை காவல் ஆய்வாளர் முருகன் , சார்பு ஆய்வாளர் காசி மற்றும் தெப்பக்குளம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் முகம்மது இத்ரிஸ் ஆகியோர் கைது செய்தனர். அவர்களி டமிருந்து ஏழரை பவுன் தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரும் நீதிமன்றக் காவலில் அடைக் கப்பட்டனர்.
தேனி அருகே கஞ்சா விற்பனை: 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது
தேனி ,மே.13- தேனி அருகே கஞ்சா விற்பனை செய்த 2 பெண்கள் உட்பட 4 பேரை கைது செய்த காவல்துறையினர் 4 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். தேனி அருகில் உள்ள பூதிப்புரம் ரயில்வே பாலம் அருகே உள்ள ஓடையில் சிலர் கஞ்சா பதுக்கி வைத்திருப்ப தாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை காவல் சார்பு ஆய்வாளர் கதிரேசன் தலைமையில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அங்கு பூதிப்புரம் கோட்டை மேட்டுத்தெருவை சேர்ந்த ஜெயச்சந்திரன் மனைவி செல்வராணி(55), அவரது மருமகள் முத்துலட்சுமி(35), ராமக்காரத்தெருவை சேர்ந்த நடராஜன் மகன் தங்கபாண்டி(27) மற்றும் மஞ்சி நாயக் கன்பட்டியை சேர்ந்த சுருளி மகன் முருகன்(52), ஆகியோர் விற்பனை செய்வதற்காக கஞ்சாவை பொட்டலமிட்டு கொண்டிருந்தனர். அவர்களை தனிப்படை காவல்துறையினர் சுற்று வளைத்து பிடித்து பழனிசெட்டிபட்டி காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து 4 பேரையும் செய்து செய்தனர். அவர்களிடமிருந்த 4 கிலோ கஞ்சா மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், ரூ.36,500 பணம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.