திருவில்லிபுத்தூர்,ஜன.18- விருதுநகர் மாவட்ட கைப்பந்து கழகம், ஜி.எஸ். இந்து மேல்நிலைப்பள்ளி மற்றும் ஜி.எஸ். பாய்ஸ் வாலி பால் கிளப் ஆகியவற்றின் சார்பில் பள்ளி மாணவர் களுக்கான மாவட்ட வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி இந்து மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. போட்டியினை பள்ளியின் செயலர் டிஏஎஸ். கிருஷ்ணன், பள்ளியின் கமிட்டி உறுப்பினர் ஸ்ரீதரன் மற்றும் வரதராஜன், தலைமை ஆசிரியர் வி.எஸ். கண்ணன் ஆகியோர் துவங்கி வைத்தனர். இப்போட்டியில் 15 பள்ளி அணிகள் பங்கு பெற்றன. மாலையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளி அணியினரும், திருவில்லிபுத்தூர் குருஞான சம்பந்தர் இந்து மேல்நிலைப்பள்ளி அணியினரும் விளையாடினர். இதில் இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளி அணி முதலிடம் பெற்று கோப்பையை வென்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு காவல்துறை துணை கண்காணிப்பா ளர் எம்.சபரிநாதன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி னார். விருதுநகர் மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் துரை சிங், ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.சிவப்பிரகாசம், விருது நகர் மாவட்ட கைப்பந்து கழக தலைவர் எம்.பி. செல்வ கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.