மதுரை மாநகராட்சி சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் காற்று மாசு தவிர்த்தல் குறித்த பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை புதனன்று மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங், துணை மேயர் தி. நாகராஜன் ஆகியோர் துவக்கி வைத்தனர். . இந்நிகழ்வில் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, மதுரை மாவட்ட கல்வி அலுவலர் கு.முரளி, மண்டல தலைவர் (மத்தியம்) பாண்டிச்செல்வி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், மாசுக்கட்டுப் பாடு வாரிய உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் தேவகிருபை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.