districts

img

தேனி அருகே பள்ளி மாணவன் கழுத்தறுத்து கொலை : 3 பேர் கைது

தேனி,மே.16- தேனி மாவட்டம், பூதிப்புரம் சின்னம் மாள்புரத்தைச் சேர்ந்தவர் சரவணன் மகன் கமலேஸ்வரன்(18). இவர் கடந்த ஆண்டு பழனிசெட்டிபட்டியில் உள்ள உதவி பெறும் பள்ளியில் பிளஸ்- 1தேர்வு எழுத வந்த போது மாணவி ஒருவருடன் பழக்கம்  ஏற்பட்டது. இவர்களின் பழக்கம் மாணவி யின் தந்தைக்கு தெரிந்ததால் அவர் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் தனது மகளுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை அழிக்க வேண்டும் என்று கூறி கடந்த ஜனவரி 12 அன்று கமலேஸ்வரனின் மொபைலை மாணவியின் தந்தை பறித்துச் சென்றார். மேலும் தனது மகளுடன் தொடர்பு வைத்தால் கொலை செய்து விடுவோம் என்று தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.இருப்பினும் கமலேஸ்வரன், அந்த மாணவியுடன் பழகி வந்துள்ளார். இதனால் மார்ச் 16 அன்று மாணவி யின் பெற்றோர்  கமலேஸ்வரன் வீட்டுக்குச் சென்று அவரை கடுமையாக தாக்கியுள்ள னர். இருப்பினும் இருவரின் பழக்கம் தொடர்ந்துள்ளது. இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி யன்று இருசக்கர வாகனத்தில்  சென்ற கமலேஸ்வரன் வீடு  திரும்பவில்லை. 15 ஆம் தேதி மாலையில் பூதிப்புரம் தோட்டத்து கிணற்றுமேடு பகுதியில் கழுத்து அறுபட்ட நிலையில் இறந்து கிடந்தார். கமலேஸ்வரனின் தாய் ஊஞ்சம்மாள் அளித்த புகாரின் பேரில்  வழக்கு பதிவு செய்த பழனிசெட்டிபட்டி சார்பு ஆய்வா ளர் பாக்கியம் ,வழக்கில் சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.