மதுரை சகோதயா சங்கம் சார்பில் வட்டார அளவிலான சிலம்பம் போட்டி சிவகாசி ஆர்எஸ்ஆர் இன்டர்நேசனல் பள்ளியில் நடைபெற்றது. திருவில்லிபுத்தூர் பிள்ளையார் குளம் சத்யா வித்யாலயா (சிபிஎஸ்இ) பள்ளி மாணவர்கள் 14 பேர் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்று வென்று, மூன்றாமிடத்தைப் பிடித்தனர். வெற்றிபெற்றவர்களை பள்ளி குழுமத் தலைவர் குமரேசன், பள்ளி முதல்வர் செந்தில்குமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி கௌரவித்தனர்.