மதுரை, ஏப்.7- மக்களவையில் ஐந்தாண்டுக ளாக ஒலித்த குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும். மதுரை மக்களின் குரலை மட்டுமல்ல; தமிழகத்தின் குரலை எதிரொலித்த சு.வெங்கடேசன் குரல் ஒலிப்பதை வாக்காளர்கள் உறுதி செய்துவிட்டனர் என்று திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் கூறியுள்ளார்.
திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் மதுரை தொகுதி யில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடே சனை ஆதரித்து திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீர பாண்டியன் அண்ணாநகர், மஹபூப் பாளையம், விராட்டிபத்து ஆகிய இடங் களில் பிரச்சாரம் மேற்கொண்டார். மதுரை மஹபூப்பாளையத்தில் வாக்காளர்கள் மத்தியில் அவர் பேசு கையில், ‘‘தேர்தலில் பாஜக வெற்றி பெறக் கூடாது எனக் கூற வந்தேன்.
ஆனால், நீங்களே பாஜக வெற்றி பெறாது’’ எனக் கூறிவிட்டீர்கள். பாஜக வெற்றி பெற்றால் இஸ்லா மியர், கிறிஸ்தவர்களுக்கு மட்டும் அல்ல; இந்துக்களுக்கும் ஆபத்து, இந்தியாவிற்கே ஆபத்து. பாஜக மூன்று சதவீதம் பேரை மட்டுமே இந்துக்கள் என்கிறது என்ற உண்மை யை நீங்கள் நண்பர்கள், உறவினர்க ளிடம் பிரச்சாரம் செய்யவேண்டும். இஸ்லாமியர்களை அழிக்கத்தான் சிஏஏ திருத்தச் சட்டம் கொண்டு வரப் பட்டுள்ளது. இதன் ஆபத்தையும் நீங்கள் மற்றவர்களிடம் கூற வேண்டும்.
பிள்ளைகளைப் படிக்கச் சொல் லுங்கள் என்பது இந்தியா கூட்டணி. மசூதியை இடிப்போம் எனச் சொல் வது பாஜக கூட்டணி. தலை கீழாக நின் றாலும் தாமரை தமிழகத்தில் மலராது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ‘நல்ல’ சாதியப் பின்னணி கொண்டவராம். அப்படி யென்றால் அவர்களுடன் உள்ள எல். முருகன் குறித்து மோடி என்ன சொல்கிறார்? சாதியத்தைப் பின்பற்று பவர் பிரதமராக வரக்கூடாது. இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள் அனைவரும் ஒற்று மையாக இருந்து சமூக நீதியை, ஒற்றுமையை நிலை நாட்ட (Unity) விரும்புகிறோம்.
ஆனால் மோடி ஒற்றை அடையாளத்தை (Uniformity) மட்டுமே விரும்புகிறார். பாஜக சார்பில் போட்டியிடும் இராம.ஸ்ரீநிவாசன், ‘‘பாரத மாதா பேசும் மொழியெல்லாம் தமது தாய் மொழி என்கிறார்’’ தமிழகத்தின் தாய் மொழி, தமிழர்களின் தாய் மொழி தமிழ். பாரத மாதா இந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகள் பேசுவார். அப்படியென்றால் இராம.ஸ்ரீநிவாசன் இந்தி, தெலுங்கு, கன்ன டம் பேசும் மாநிலங்களில் போட்டியி டாமல் ஏன் இங்கு போட்டியிடுகிறார்? தமிழின் அடையாளம் மதுரை, தமிழ் உணர்வின் அடையாளம் மதுரை, பாண்டிய மண்ணின் நகரம் மதுரை, நீதி கேட்ட கண்ணகியின் நக ரம் மதுரை. மதுரைக்காக, தமிழகத் திற்காக குரல் கொடுக்க சு.வெங்கடே சனை வெற்றி பெறச் செய்யுங்கள். வானில் செங்கொடி உயரட்டும், செங்கொடி இயக்கமும், திராவிட இயக்கமும் என்றும் கைகோர்த்து நிற்கட்டும்’’ என்றார்.
அதிமுகவை மோசடிக் கட்சி என்று சொன்னவர் சரவணன்
அதிமுக வேட்பாளர் சரவணனை ‘சர்வ கட்சி சரவணன்’ என நண்பர்கள் கூறுகிறார்கள். ஏ.கே.போஸ் தாக்கல் செய்த வேட்புமனுவிற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா கைரேகை இட்டிருந்தார். இந்த கை ரேகை போலியானது என நீதிமன்றம் சென்றவர் சரவணன். நீதிமன்றமும் ஏ.கே.போஸின் வேட்புமனுவில் உள்ளது ஜெயலலிதாவின் கைரேகை அல்ல; அதிமுக ஒரு மோசடிக் கட்சி என்று கூறியது. அதிமுகவை மோசடிக் கட்சி என நீதிமன்றத்தில் நிரூபித்தவரையே வேட்பாளராக நிறுத்தியுள்ளனர்.