மதுரை, மே 9- ரயில் நிலையங்களில் ‘‘ஒரு நிலையம் ஒரு விற்பனை’’ என்ற அடிப்படையில் மதுரை ரயில் நிலையத்தில் உள்ளூர் தயா ரிப்பான பாரம்பரியமான சுங்கடிச் சேலை விற்பனையை மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங் கடேசன் திங்களன்று துவக்கி வைத்தார். நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன் மற்றும் ரயில்நிலைய அதிகாரிகள் கலந்து கொண்ட னர். தொடர்ந்து அவர் செய்தியா ளர்களிடம் கூறுகையில், இந்திய அரசின் ஒரு ரயில்வே ஒரு விற் பனை நிலையம்” என்ற திட்டத் தின் கீழ் மதுரை ரயில் நிலை யத்தில் மதுரையில் பாரம்பரிய மான சுங்குடி சேலை விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. சுங்குடி சேலைக்கான ஜிஎஸ்டி வரியை ஒன்றிய அரசு முழுமையாக ரத்து செய்யவேண்டும் மதுரை கோட்டத்திற்கு உட் பட்ட 19 ரயில் நிலையங்களில் 19 பொருட்கள் விற்பனை செய்வ தற்கான ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளது. தூத்துக்குடியில் பனை பொருட்களால் தயார் செய்யப்பட்ட பொருட்கள், கோவில்பட்டியில் கடலைமிட் டாய், ஆத்தங்குடி டைல்ஸ், திண்டுக்கல் சின்னாளப்பட்டி சேலை போன்றவைகள் அந்த அந்த ரயில் நிலையங்களில் விற் பனை செய்யப்படுகிறது என்றார்.