திருவாரூர் மாவட்டம் குடவாசல் பேரூராட்சிக்கு வழங்கிய சுகாதார மின்கல பேட்டரி வாகனங்களை சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் முருகேசன் மகாலட்சுமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் கே.குணசேகரன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் யசோதா வரவேற்றார்.