districts

img

மண்பானை, மண் அடுப்புகள் விற்பனை மந்தம்

தூத்துக்குடி,ஜன. 12 கொரோனா பரவல் தடுப்பு நட வடிக்கையால் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலங்களில் கொண்டா டப்படும் சமத்துவ பொங்கல் போன்ற விழாக்கள் நடைபெறா ததால் தூத்துக்குடியில் மண் பானை,மண் அடுப்புகள் வியா பாரம் மந்தம் அடைந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரி வித்துள்ளனர். தமிழகம் முழுவதும் வரு கின்ற வெள்ளிக்கிழமை பொங் கல் பண்டிகை கொண்டாடப்படு கிறது. தூத்துக்குடி மாவட்டத் தில் பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை புது மண்பானை யில் மண் அடுப்பைப் பயன் படுத்தி புத்தரிசி பொங்கலிட்டு கொண்டாடுவது வழக்கம். இதைப்போல் பொங்கல் விழா வையொட்டி பள்ளி, கல்லூரி, அரசு அலுவலங்கள், தேவால யங்கள் மற்றும் குடியிருப்புகளில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்படுவது வழக்கம்.   இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்படாததால்   தூத்துக்குடியில் உள்ள மண் பாண்ட கடைகளில் மண்பானை மற்றும் மண் அடுப்புகள் விற் பனை மந்தம் அடைந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரி வித்துள்ளனர்.