நாகர்கோவில் ஏப். 28 கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவிலில் சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் சார்பில் சமத்துவ இஃப்தார் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைப்பின் மாநில தலைவர் எஸ் நூர் முகமது உரை யாற்றுகையில் கூறியதாவது ; சிறுபான்மை மக்கள் நலக்குழு தமிழகத்தில் அனைத்து மதத்தவ ரையும் உள்ளடக்கியதாகவே செயல்பட்டு வருகிறது. மேலும் இது பெயரளவில் சிறுபான்மை என இருப்பினும் இதில் அனைத்து மதம் சார்ந்த விழாக்களும் திருவிழாக்க ளாக கொண்டாடி சமத்துவம், மத சார்பின்மை, மக்கள் ஒற்றுமை உள்ளிட்ட கோட்பாடுகளை அடிப்ப டையாக கொண்டு செயல்பட்டு வருகிறோம். மேலும் இந்த அமைப்பின் முக்கிய அம்சமாக மாநில நிர்வாகிகள் அனைத்து மதத்தை சார்ந்தவர்க ளாகவும் இருக்க வேண்டும் என்பது தான்.மேலும் இங்கு மத சார் பற்ற அனைத்து கட்சிகளை சேர்ந்த வர்களும் இருக்கிறார்கள். ஒரு கட்சியை தவிர அது உங்கள் அனை வருக்கும் தெரியும். மதுரையில் சமணர்கள் அதிக மாக இருக்கும் பகுதியிலிருந்து ஒரு வேண்டுகோள் எங்களிடம் வந்தடைந் தது. அது என்னவென்றால் “ எங்களை யும் தனி சிறுபான்மை மதமாக ஏற்று இந்த அமைப்பில் இணைத்து கொள்ளுங்கள்” என்று. ஆக நாம் கொண்டு சேர்க்கும் சமத்துவ கோட் பாடு அனைவரையும் சென்றடை கிறதை எண்ணி நாங்கள் மகிழ்வடை கிறோம். இன்று நாட்டில் சிறுபான்மையினர் பல்வேறு இன்னல்களுக்கும் நெருக்க டிக்கும் உள்ளாக்கப்பட்டு வருகின்ற னர்.
குறிப்பாக அவர்கள் உண்ணும் உணவு, பேசும் மொழி, உடுக்கும் உடை அத்தோடு கல்வியும் கேள்விக் குறியாக்கப்படுகிறது.ஒரு மதச் சார்பற்ற அரசியல் சட்டம் இருக்கும் நாட்டில் ஒரு மதத்திற்கு எதிராக வன்முறையும் வெறுப்பரசியலும் திணிக்கப்படுகிறது. முன்நாட்களில் எல்லாம் கும்பல் கள் வரும். இன்றோ புல்டோசர்கள் வருகிறது. எந்த நேரத்தில் எது நடக்கும் என்பதே தெரியாது. ஆனால் இது அரசின் பின் துணையோடு நடப்பது தான் வேதனை அளிக்கி றது. எது உடன் நின்று ஒடுக்கினாலும் ஒடுக்கப்பட்டோரின் பக்கம் நின்று ஜகாங் கிர்புரி சிறுபான்மையினருக்காக புல்டோசர்கள் முன் பாய்ந்து அம்மக்க ளை காத்து நம்பிக்கையளித்தார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிருந்தா காரத் நாட்டின் மதசார்பின்மையையும் ஒற்றுமையை யும் காக்க அனைத்து மதசார்பற்ற அரசியல் இயக்கங்களும் அமைப்பு களும் கைகோர்த்து பிரிவினைகளை மாய்த்து மனிதம் காக்க முன்வர வேண்டும்.
இதுவே இந்த சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் வேண்டுகோள் என்றார். இந்நிகழ்விற்கு மாவட்ட தலைவர் மிடாலம் எம்.ஏ. சலாம். தலைமை வகித்தார் முஸ்லிம் கலை கல்லூரி தாளாளர் எச். முகமது அலி, முன்னாள் எம் பி க்கள் நாஞ்சில் வின்சென்ட், ஹெலன் டேவிட்சன், பேராசிரியர் அப்துல் சமது, அமைப்பின் மாவட்ட துணை தலைவர் பி.விஜய மோகன், வழக்கு ரைஞர்கள் டெல்பின், ராதாகிருஷ் ணன், வெற்றிவேல், தி டிஸ்டிரிக்டு கிளப் தலைவர் பால ஜனாதிபதி உள்ளிட்டோர் பேசினர். அமைப்பு நிர்வாகிகள் சுப்பிரமணியம், மாநில பொருளாளர் எம்ள. அகமது உசைன், மாவட்ட துணைத்தலைவர் டி.ஆப்ர காம் நெல்சன் ஆசிர், எஸ். அந்தோணி, ஊனா.சாகுல் அமிது, அருட்பணி மரிய வின்சென்ட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.