தேனி, டிச.20- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதி யர்கள் சங்கத்தின் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 20 செவ்வாயன்று பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். ஓய்வு பெறும் நாளில் தற் காலிக பணி நீக்கம் செய்யக் கூடாது, நீதிமன்ற தீர்ப்புகள் ,அரசாணைகளின்படி ஓய்வூ தியப் பயன்கள் வழங்க வேண்டும். ஓய்வூதியர்கள் மீதான நடவடிக்கை, நிலுவை இனங்கள், புகார்களின் மீதான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைகள் ,விசாரணை அலுவலர்கள் துறை ரீதி யான விசாரணைகளை தாம தமின்றி அரசு நிர்ணயித் துள்ள காலவரையறைக் குள் முடிக்க வேண்டும் என் பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி ஆட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சங்கத்தின் தேனி மாவட்ட தலைவர் ஆர். ராமச்சந்திரன் தலைமை வகித்தார் .மாவட்ட துணைத் தலைவர் வா.வாசுதேவன் வரவேற்று பேசினார் .ஓய்வூ தியர் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் சி.பா .ஆண்டவர் துவக்கவுரையாற்றினார் .அனைத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் கே. துரைராஜ், இச் செயலா ளர் இரா.கனகராஜன் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர் . அரசு போக் குவரத்து ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மண்டல துணைப் பொதுச்செயலா ளர் பாலையா, மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாநில துணைத் தலைவர் சந்திரசேகர் ஆகியோர் ஆத ரித்து பேசினர் .ஓய்வு பெற்ற பள்ளி -கல்லூரி ஆசிரியர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் எம்.பொன்னையா நிறைவுரையாற்றினார்.
மதுரை
மதுரை மாவட்ட ஆட்சி யரகம் திருவள்ளுவர் சிலை அருகில் மாவட்டத் தலைவர் எஸ். முத்துராமலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏ.எம். கிருபாகரன் சக்திராஜ், ஜி. ஜெயராமன், இரா.சொக்க லிங்கம் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் அ. பால்முரு கன், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் உள்ளாட்சித் துறை அலுவலர்கள் சங்க மாநில பொருளாளர் மா.விஜய பாஸ்கர் ஆகியோர் ஆத ரித்துப் பேசினர். சங்க மாநில பொருளாளர் என். ஜெயச்சந் திரன் நிறைவுரையாற்றி னார். மாவட்ட பொருளாளர் ஆர்.பரமசிவன் உட்பட பலர் பங்கேற்றனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத்தலைவர் மாணிக் கம் தலைமை வகித்தார். சத்தியமூர்த்தி வரவேற்றார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச்செயலாளர் எஸ்.சுப்ரமணியம் பேசினார். மாநிலச் செயலாளர் வீர கடம்பு கோபு, அரசு ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் எஸ்.முபாரக்அலி ஆகி யோர் ஆதரித்துப் பேசினர். அனைத்துத்துறை ஓய்வூதி யர் சங்க மாவட்டத்தலைவர் எஸ்.எம்.ஜெயசீலன் நிறைவு ரையாற்றினார். சடையப் பன் மற்றும் பலர் பங்கேற்ற னர்.