districts

மதுரை முக்கிய செய்திகள்

கார் ஓட்டுநரிடம் நூதன முறையில் ரூ.2.50 லட்சம் மோசடி

விருதுநகர், ஏப்.20- விருதுநகர் அருகே கார் ஓட்டுநரிடம் நூதன முறை யில்  ரூ. 2.62 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் தேடி  வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டம்  நகரிகாத்தான் பகுதி யைச் சேர்ந்தவர் அருள் அன்பரசு (39). இவர்  சொந்தமாக  கார் வைத்து தொழில் செய்து வருகிறார். இவரிடம் கோவை, காந்தி நகரில்  இருந்து ஒருவர் சென்னைக்கு செல்ல வேண்டுமென்று கூறியுள்ளார். அதற்கு கார் வாட கையாக  ரூ. 8 ஆயிரம் என     அருள் அன்பரசு பேசியுள்ளார்.  ஆனால், அந்த நபர், கூடுதலாக ஆயிரம் ரூபாய் வாடகை யுடன் சேர்த்து தந்துள்ளார். இதையடுத்து, அத்ந நபர் தான்,  காரைக்குடி கழனி வாசலை சேர்ந்த சங்கர் என அறிமுகமாகியுள்ளார்.   இந்தநிலையில், சில நாட்களுக்கு முன்பு அருள் அன்ப ரசை செல்போனில் தொடர்பு கொண்ட சங்கர், தனக்கு சொந்தமான  11 பவுன் நகை ரூ. 2 லட்சத்து 62 ஆயி ரத்திற்கு ஏலம் வருவதாகவும், அதனை வாங்கிக் கொள்ள  விருதுநகர் வருமாறும் கூறியுள்ளார். இதை நம்பி, தனது மனைவியின் நகைகளை அடகு  வைத்து ரூ.2.63 லட்சம் பணத்தை திரட்டி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வந்த அருள் அன்ப ரசு,  பணத்தை சங்கரிடம் கொடுத்துள்ளார். அப்போது, ஆட்சியர் அலுவலக மாடியில் ஏலம் நடக்கிறது எனக் கூறிச் சென்ற சங்கர் திரும்ப வரவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அருள் அன்பரசு இது குறித்து சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதி செய்து சங்கரைத் தேடி வருகின்றனர்.

இருக்கண்குடி கோவில் உண்டியலில் ரூ.42 லட்சம் காணிக்கை

சாத்தூர், ஏப்.20- விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள இருக்கண்குடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில்  உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவிலில் உள்ள உண்டியல்கள் எண்ணப்பட்டன. இதில், 10 நிரந்தர உண்டியல்களில்  ரூ.38லட்சத்து 30 ஆயிரத்து 420, கோசாலை உண்டியலில் ரூ.81ஆயிரத்து 924, தற்காலிக உண்டியலில் ரூ.3லட்சத்து 4ஆயிரத்து 371  என மொத்தம் ரூ.42லட்சத்து 16 ஆயிரத்து 716 இருந்தது. மேலும், 119 கிராம் பலமாற்று பொன் இனங்கள், 627  கிராம் வெள்ளியும் இருந்தது தெரிய வந்தது. முன்னதாக உண்டியல் எண்ணும் பணியை உதவி  ஆணையர், செயல் அலுவலர் ஆகியோர் பார்வையிட்ட னர்.

போடி அருகே பேருந்து மோதிய  விபத்தில்  விவசாயி பலி

தேனி, ஏப்.20- போடியில் கேரள அரசு பேருந்து மோதி இரு சக்கர  வாகனத்தில் சென்ற விவசாயி பலியான சம்பவம் குறித்து குரங்கணி காவல் துறையினர்  வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம், போடி வெங்கடாசலபதி கோவில்  தெரு, தலைமை தபால் நிலையம் அருகே வசிப்பவர் சக்திவேல் மகன் செந்தில் பிரபு (46). இவர் வழக்கறி ஞர் படிப்பு படித்து வருகிறார். போடி முந்தல் பகுதியில்  உள்ள தனது தோட்டத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். போடி-மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது எதிரில் வந்த கேரள அரசு பேருந்து செந்தில் பிரபு ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த செந்தில் பிரபு சம்பவ  இடத்திலேயே இறந்து போனார். விபத்து குறித்து குரங்கணி போலீசார் வழக்கு பதிவு செய்து கேரள அரசு பேருந்தை ஓட்டி வந்த கேரள மாநிலம் அடிமாலி அருகே  மண்ணாகண்டம் என்ற இடத்தை சேர்ந்த ஸ்ரீதரன் மகன்  ஜெயக்குமார் (47) என்பவரை விசாரித்து வருகின்றனர்.

பழனியில் மருத்துவரிடம்  கொள்ளையடித்த பணம்-நகைகள் மீட்பு

பழனி, ஏப் 20-  பழனி அண்ணா நரைச் சேர்ந்த மருத்துவர் உதயகுமார்  பழனி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணி புரிந்து வருகிறார்.    இவர் கடந்த 13-04-23 ம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்தபோது வீட்டுக்குள் நுழைந்த நபர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தி அவர் வீட்டில் இருந்த நகை பணம் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக நான்கு தனிப்படைகள் அமைக் கப்பட்டு புலன் விசாரணை நடத்தினர்.இதில்  பழனியைச் சேர்ந்த ராஜாராம் மகன் சரவணகுமார் என்பவரை கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து சுமார் 34 சவரன் தங்க நகை கள், சுமார் ஐந்து கிலோ மதிப்புடைய வெள்ளி பொருட்களும், பணம் ரூ. 7 லட்சம், அருரிடமிருந்து சிப்ட் கார் ஒன்றையும், இரண்டு இருசக்கர வாகனங்களும் மேலும் தங்கத்தை உருக் கக்கூடிய எலக்ட்ரிக் பர்னஸ் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.  இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு கொள்ளை யர்களை கைது செய்து.பணம்.நகைகள்   கைப்பற்றப் பட்டுள்ளன. மேலும் சிலரை தனிப்படையினர் தேடி வரு கின்றனர்.

தொட்டமான்துறை கால்வாய் பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?

சட்டமன்றத்தில் அமைச்சர் விளக்கம்

சென்னை, ஏப்.20-  தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும், தேனி மாவட்டம், உத்தம பாளையம் வட்டம், தொட்ட மான்துறை கால்வாய் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து கம்பம் தொகுதி திமுக உறுப்பினர் ராம கிருஷ்ணன், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதில் அளித்து பேசிய நீர்வளத்  துறை அமைச்சர் துரைமுருகன் கூறியதா வது;- இந்த திட்டம் தொட்டமான்துறை அரு கில் சுருளி யாற்றிலிருந்து சண்முகா நதி நீர்த்தேக்க திட்டக்கால்வாய் மற்றும் 8 கிராமங்களில் உள்ள 34 கண்மாய்களுக்கு குழாய் மூலம் நீர் வழங்கும் பாசன வசதி  வழங்குவதாகும். இதற்காக கடந்த ஆட்சி யில் 91 கோடி ரூபாய்க்கு அரசாணை ஒன்றும் வெளியிடப்பட்டு ஒப்பந்த புள்ளியும் கோரப்  பட்டது. தேர்தல் நன்னடத்தை விதிகள் அம லுக்கு வந்ததால் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது திருத்திய மதிப்பீடாக 130 கோடி தேவைப்படுகிறது. நிதி அமைச்சர்  உடனடியாக நிதியை ஒதுக்கிக்கொடுத் தால் இந்த பணியை விரைந்து செயல்பாட்  டுக்கு கொண்டு வரப்படும். தேனி, போடிநாயக்கனூர், ஆண்டிப் பட்டி உள்ளிட்ட பல பகுதிகளும் பயன் பெறும் வகையில் சுமார் 40 கிலோ மீட்டர்  தூரத்திற்கு தண்ணீரை எடுத்துச் சென்று வழங்குவதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாகும். மேலும் நீர்வளத் துறையின்  கண்மாய்கள் மற்றும் 27 ஊராட்சி ஒன்றிய  கண்மாய்கள், 2300 கிணறுகள், 363 ஆழ்  துளை கிணறுகள் ஆகியவற்றை நீர் சரிவூ ட்டுதலின் மூலம் 7250 ஏக்கர் பாசன நிலங்கள் பயனடையும். அந்தப் பகுதியில் உள்ள குடி நீர் தேவை மற்றும் கால்நடைகளுக்கும் தண்ணீர் தேவை பூர்த்தி செய்து கொடுக் கப்படும். ஆனாலும் கம்பம் பள்ளத்தாக்கு விவ சாயிகள் இடையே பலத்த எதிர்ப்பு உள்ள தால் இந்த திட்டத்தை செயல்பாட்டுக்கு எடுத்துக் கொள்வதில் பிரச்சனை நீடித்து வருகிறது பேச்சு வார்த்தை மூலம் விரை வில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப் படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளி சிறுமி வல்லுறவு குற்றவாளிக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை

திருவில்லிபுத்தூர், ஏப்.20- விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வடக்கு மலை யடிப்பட்டி எம்ஜிஆர் நகரில் ராஜாதி ராஜா என்ற பெயரில்  சர்ச் நடத்தி வருபவர் ஜோசப் ராஜா (49). இவரது சர்ச்சுக்கு அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி தினசரி சென்று வந்தார். இந்நிலையில் கடந்த 2022 மே மாதம் 3 ஆம் தேதி அன்று  சர்ச்சுக்கு சென்ற சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக  அவரது தாயார் காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின்  அடிப்படையில் பாதிரியார் ஜோசப் ராஜா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மாற்றுத்திறனாளிகள் சங்கம், அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்  டம் நடத்தியதின் விளைவாக ஜோசப் ராஜா குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு திருவில்லிபுத்தூர் போச்சோ நீதி மன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வியாழனன்று தீர்ப்பு  அளிக்கப்பட்டது.  குற்றவாளி ஜோசப் ராஜாவிற்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனையும் 10 லட்ச ரூபாய் அபராதமும் அபரா தத்தை செலுத்த தவறும் பட்சத்தில் கூடுதலாக 5 ஆண்டு  சிறை தண்டனையும் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்ப ளித்துள்ளது. இத்தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் வரவேற்றுள்ளது.

சிறுமியின் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க சிபிஎம் கோரிக்கை

நீதிமன்ற தீர்ப்புக்காக பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயும்  மாதர் சங்கம், மாற்றுத்திறனாளிகள் சங்கம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நிர்வாகிகள் நீதிமன்ற வளாகத்தில் இருந்தனர்.அப்போது குற்றவாளியின் சகோதரர் பெஞ்சமின் பிரபு நேரடி யாக வந்து பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயைப் பார்த்து,  தீர்ப்பு எனது அண்ணனுக்கு எதிராக வந்தால் உன்னை மட்டு மல்ல அனைவரையும் வெட்டி விடுவேன். யாரையும் சும்மா  விடமாட்டேன் என மிரட்டி சென்றார்.  நீதிமன்ற வளாகத்தி லேயே மிரட்டி சென்ற பெஞ்சமின் பிரபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்  திற்கு  பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தமிழ்  நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் வலி யுறுத்தியுள்ளது. 

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு  கொடுத்தவர் கைது

நத்தம், ஏப்,20- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பூதகுடி-சுண்டைக்காய்பட்டி யை சேர்ந்தவர் ஆறுமுகம் (. வயது 42). இவர் அதே பகுதியை சேர்ந்த உற வினரான 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது  குறித்து சிறுமியின் தாயார்  நத்தம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.  அதன்பேரில் விசாரணை செய்த நத்தம் காவல்  ஆய்வாளர்  தங்கமுனி யசாமி ஆறுமுகத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள்   விடுப்பு போராட்டம் 

மதுரை, ஏப். 20-  மதுரை மாவட்டம், மேலூர் ஊராட்சி ஒன்றியம் சருகுவலையப்பட்டி கிராம ஊராட்சியில் பாரத பிரதமர் வீடு கட்டும்  ( G ) திட்டப் பணிகளை செயல்படுத்திய 7 அலுவலர்கள் மீது 17 ( பி ) கீழ்  வழங்கப்பட்ட குற்றச்சாட்டு குறிப்பாணை யிணை திரும்ப பெற வேண்டும் , மதுரை  மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் பணி யிடை நீக்கம் செய்யப்பட்ட 4 ஊராட்சி செயலாளர்களுக்கு மீண்டும் பணியிடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும், விடுமுறை நாட்களில் நேரில் மற்றும் காணொலி காட்சி வாயிலாக நடத்தப்படும் ஆய்வுக் கூட்டங்களை தவிர்த்திட வேண்டும் என்ற கோரிக்கைகளை மதுரை மாவட்ட நிர்வாகம் நிறைவேற்றித் தரக்கோரி மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை  அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில்   ஒரு நாள் சிறுவிடுப்பு போராட்டம் வியாழனன்று நடைபெற்றது.  போராட்டத்தின் காரணமாக மதுரை கிழக்கு, மேற்கு மற்றும் மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலகங்கள் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.