districts

img

மின்னல் தாக்கி இறந்த 4 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் அமைச்சர் வழங்கினார்

தமிழக - கேரள மக்கள் திரண்டனர் தேனி, ஏப்.16- தமிழக -கேரள எல்லையில் கூட லூர் அருகே உள்ள கண்ணகி கோட் டத்தில் புகழ்பெற்ற கண்ணகி கோவி லில் சனிக்கிழமை நடைபெற்ற சித் திரை முழுநிலவு விழாவில் தமிழக, கேரள மக்கள் திரண்டு வழிபட்டனர். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக் குள் இக்கோவில் இருப்பதால், கோவி லுக்கு செல்ல பக்தர்களுக்கு இரு மாநில அரசுகளால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. ஆண்டு தோறும் சித்திரை முழுநிலவு நாளில் திருவிழா நடைபெறும் .கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்  பாடு காரணமாக தடை விதிக்கப்பட் டது. இந்தாண்டு விழாவை முன்னிட்டு அதிகாலை முதலே பளியன்குடி, குமுளியில் பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் இருந்தது. கம்பம், கூடலூர் வழியாக பளியன்குடிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. பளியன்குடியிலிருந்து 6.6 கிலோ மீட்டர் தமிழக வனப்பாதை வழியாக நடந்து செல்லும் பக்தர்களுக்கு கூட லூர் நகராட்சி சார்பில், இளைப்பாற தற்காலிக ஓய்வறை, குடிதண்ணீர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  குமுளியில் கொக்கரக்கண்டம் பகுதியில் இருபால் பக்தர்களும் மெட்டல் டிடெக்டர் சோதனைக்குப் பிறகே கோவிலுக்கு அனுப்பப்பட்ட னர். பளியன்குடி வழியாகவும், கொக்க ரக்கண்டம் வழியாகவும் பல்லாயிரக்க ணக்கான பக்தர்கள் நடைபயணமாக மலை உச்சியிலுள்ள கண்ணகி கோவி லுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்த னர். கோவிலில் காலை 5 மணிமுதல் 10 மணி வரை பள்ளி உணர்த்தல், மலர் வழிபாடு, யாகபூஜை, மங்கல இசை, பொங்கல்வைத்தல், பிரசாதம் வழங்குதல், பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 10 மணி முதல் 12 மணிவரை பக்தர்கள் தங்க ளின் நேர்த்திக்கடன் செலுத்துதல் நிகழ்ச்சியும், அம்மனுக்கு பூஜித்த  மங்கலநாண், வளையல் பக்தர் களுக்கு வழங்கும் நிகழ்ச்சியும் நடை பெற்றது. மதியம் 12 மணிமுதல் பிற்பகல் 2.00 வரை மணிமேகலையின் அமுத சுரபியில் (அட்சய பாத்திரத்தில்) உணவு வழங்குதல் நிகழ்ச்சியும், அவல் சிறப்புணா வழங்கல், திரு விளக்கு வழிபாடு, பூமாரி விழாவோடு சித்திரை முழு நிலவு விழா நிறைவு பெற்றது. கண்ணகி கோவில் அறக் கட்டளையினர் சார்பாக பக்தர்க ளுக்கு கோவில் வளாகத்திலும், பளி யங்குடியிலும் காலை முதல் மாலை வரை அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் வளாகத்தில் பக்தர்கள் பாது காப்பில் இருமாநில போலீஸ், மருத்து வத்துறை, வனத்துறை, தீயணைப் புத்துறை, வருவாய்துறை இணைந்து செயல்பட்டது. விழாவில் இடுக்கி மாவட்ட ஆட்சி யர் சீபா ஜார்ஜ், கோட்டாட்சியர் கெளசல்யா, வட்டாட்சியர் அர்ஜுனன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.