மதுரை, மே 31- சாலையோர வியாபாரி களின் மத்திய சட்டம் 2014-ஐ அமல்படுத்த வேண்டும். தேர்வு செய்யப்பட்ட வெண் டிங் கமிட்டி உறுப்பினர்களின் ஆலோசனை அடிப்படை யில் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதா ரம் பாதிக்கக்கூடிய வகை யில் ஈடுபடும் காவல்துறை , மாநகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கையை கட்டுப் படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி மதுரை மாநகர் சாலையோரம் மற் றும் மார்க்கெட் விற்பனையா ளர்கள் சங்க சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவல கம் திருவள்ளுவர் சிலை அரு கில் செவ்வாயன்று ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஜி. மோகன் தலைமை வகித் தார். துணைப்பொதுச் செய லாளர்கள் செல்வம், பால் ராஜ் ஆகியோர் பேசினர். மாவட்ட பொதுச் செயலா ளர் சந்தியாகு சிறப்புரை யாற்றினார், கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் சி. சுப்பையா நிறைவுரையாற்றி னர், சங்க நிர்வாகிகள் எஸ். எம்.பாண்டி, ஜகாங்கீர், பாண்டி, பாக்கியம், சர்க் கரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர், பொருளாளர் எஸ்.இராதாகிருஷ்ணன் நன்றி கூறினார். சிவகங்கை சிவகங்கை நகராட்சி நிர் வாகம் மாவட்ட ஆட்சி நிர்வா கம் சாலையோர சிறு கடை வியாபாரிகளுக்கு அடை யாள அட்டை மற்றும் சிறு கடை வங்கி கடன் வழங்கக் கோரி சிஐடியு மாவட்டத் தலைவர் வீரையா தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பொதுச்செயலா ளர் வேங்கையா ,மகாலிங் கம், கணேசன், பாரதி ஆனந்த் ஆகியோர் பேசினர்.