districts

img

சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்க பேரவை

மதுரை, ஜூன் 2-  மதுரை மாநகர் மாவட்ட சாலைப் போக்குவரத்து தொழி லாளர்கள் சங்கத்தின் ஆண்டுப் பேரவை செவ்வாயன்று அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.  பேரவைக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் இ.உதய நாதன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டக்குழு உறுப்பி னர் ஆர்.வாசுதேவன் துவக்கிவைத்து பேசினார்.  வேலையறிக்கையை பொதுச் செயலாளர் இரா.லெனின்,  வரவு-செலவு அறிக்கையை பொருளாளர் எஸ்.செந்தா மரைக்கண்ணன் சமர்ப்பித்தனர். சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் இரா.தெய்வராஜ் நிறைவுரையாற்றினார். க. ஜோதிபாசு நன்றி கூறினார்.  பேரவையில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக இ.உதயநாதன், பொதுச் செயலாளராக எஸ். செந்தாமரைக்கண்ணன், பொருளாளராக எஸ். சர வணக்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தை வாபஸ்பெற வேண்டும். விதி முறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ள மதுரை கப்பலூர் டோல்கேட்டை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.