தேனி, மே 18- தேனி மாவட்ட ஆட்சியரின் அலுவலக பெருந்திட்ட வளாகம், ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலக வளா கக் கூட்டரங்கில், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறை முகங்கள் துறையின் சார்பில் சாலை பாது காப்பு மற்றும் விபத்தினை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மே 18 புதனன்று நடைபெற்றது.கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரிய சாமி, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை கள் - சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீ தரன், சட்டமன்ற உறுப்பினர்கள் என்.இராம கிருஷ்ணன் (கம்பம்), ஆ.மகாராஜன் (ஆண்டி பட்டி), கே.எஸ்.சரவணக்குமார் (பெரிய குளம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வுகளின் போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க.தமிழ்செல் வன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிர விண் உமேஷ் டோங்கரே, சென்னை, நெடுஞ்சாலைத்துறை க(ம)ப தலைமைப் பொறியாளர் இரா.சந்திரசேகர், தேசிய நெடுஞ்சாலை தலைமைப் பொறியாளர் த.பாலமுருகன், மாவட்ட வருவாய் அலு வலர் தி.சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், கிராமப்புறப்பகுதிகள் மற்றும் பள்ளி, கல்லூரி சாலைப்பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் கூடுதலாக கவனம் செலுத்தி, சாலைகளை அகலப்படுத்துதல், அதிகமான வேகதடைகளை உருவாக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். சாலை விதிகளை முறையாக கடைப்பிடிக் காத நபர்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு, அபராதம் விதித்திட வேண் டும். தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்க ளின் நலனை கருத்தில் கொண்டு செயல் படுத்தப்பட்டு வரும் சாலை பாதுகாப்பு குறித்து அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என தெரிவித்தார்.
மயிலாடும்பாறை - மல்லப்புரம் சாலையை அகலப்படுத்துக!
நிகழ்வில் உரையாற்றிய ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன், மயி லாடும்பாறை -மல்லப்புரம் சாலையை அகலப்படுத்தி பொது போக்குவரத்து தொடங்க வேண்டும். மதுரை, விருதுநகர் மாவட்டத்திற்கு எளிதாக செல்ல முடியும். இதனால் 130 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை இருக்காது. இரண்டு பக்கமும் வனத்துறை சோதனை சாவடி அமைத்து தடுத்து வருகிறார்கள் 1980 ஆம் போடப்பட்ட வெள்ளிமலை சாலை பராமரிப்பின்றி உள்ளது. வனத்துறை மூலம் சாலையை போட வேண்டும். வருசநாடு - வாலிப்பாறை ,ஹைவேவிஸ் மலைப்பகுதி உள்ளிட்ட தொகுதியில் பல்வேறு இடங்க ளில் சாலை போட வேண்டியுள்ளது என் றார்.
சாலை விரிவாக்கத்தை தடுக்கும் வனத்துறை
பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணகுமார் பேசுகையில், திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தேவையான இடங்களில் தகவல் பலகை அமைக்க வேண்டும். எ.புதுப்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் குறிப்பிட்ட இடத்தில் சாலை அமைக்கப்படாததால் சாலை முழுமை பெறாமல் உள்ளது. எனவே சாலையை உடனடியாக அமைக்க வேண்டும். இதனால் பெரியகுளம் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும். கொடைக்கானல் மலைச்சாலையில் பல நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. எனவே மாற்று வழியாக பெரிய குளம் -அடுக்கம் வழியாக போக்குவரத்து தொடங்க வேண்டும். அது போல தேனி - பெரியகுளம் புறவழிச்சாலையில் சாலை யை விரிவாக்கம் செய்ய வனத்துறை தடுத்து வருகிறது. விபத்தினை குறைக்க உட னடியாக சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றார்.