திருப்பூர், அக். 14 - திருப்பூரில் மழையால் சீர்குலைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மரக்கன்று நட்டுப் போராட்டம் நடத்தியது. அந்த போராட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே மாநகராட்சி நிர்வாகம் அதன் அருகில் மழைநீர் தேங்கிய சாலையில் மண்ணைக் கொட்டி சீரமைப்புப் பணியைத் தொடங்கியது. திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செட்டி பாளையம் ரிங் ரோடு முதல் அங்கேரிபாளை யம் சாலை, கொங்கு வேளாளர் மெட்ரிகுலே ஷன் பள்ளி வரை உள்ள சாலை, அவி நாசி சாலை காந்திநகர் முதல் பிச்சம்பாளை யம் புதூர் பேருந்து நிறுத்தம் வரை உள்ள சாலை ஆகியவை ஏற்கெனவே மாநகராட்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சாலை அமைக்கப்படாததால் மிகவும் மோச மாக இருந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக மழையும் பெய்து வரும் நிலை யில் சேறும், சகதியுமாக போக்குவரத்துக்கு மிகவும் கடினமானதாக மாறியது. குறிப் பாக பல ஆயிரம் மாணவ, மாணவிகள், பனி யன் கம்பெனி தொழிலாளர்கள் பயன்படுத் தக்கூடிய இந்த பகுதி சாலைகளை குறைந்த பட்சம் அவசர உணர்வோடு சீரமைக்கக்கூட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வில்லை. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கேரிப்பாளையம் பகுதி கிளை கள் சார்பில் மேற்படி சாலைகளை உடனடி யாக சீரமைத்து போக்குவரத்துக்கு பயன் படுத்தும் வகையில் ஏற்படுத்தி தர வலியு றுத்தி அங்கேரிபாளையம் சாலை பாலு இன் னவேஷன், அன்னபூர்ணா லே அவுட், மகா விஷ்ணு நகர் ஆகிய மூன்று இடங்களில் மரக் கன்றுகள் நட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மாநக ராட்சி மேயர் ந.தினேஷ்குமார் மார்க்சிஸ்ட் கட்சியினரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி சம்பந்தப்பட்ட பிரச்சனையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித் தார். அதேசமயம் மிக மோசமான நிலையில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்ப தால், வெள்ளிக்கிழமை காலை பாலு இன்ன வேஷன் அருகே மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மரக்கன்று நடும் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்துக்கு கட்சியின் வடக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் பாண்டியன் தலைமை வகித்தார். இதில் கட்சியின் சார்பில் ஆர்.என்.ரத்தினசாமி, கே.பழனிச்சாமி, எம். பத்மநாபன், ஒன்றியச் செயலாளர் ஆர். காளியப்பன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மண்டலக்குழு உறுப்பினர் கருப்ப சாமி ஆகியோர் சாலை சீர்குலைந்திருப்ப தால் பொது மக்கள் படும் இன்னல்களை சுட் டிக்காட்டி, மாநகராட்சி நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வலியுறுத்திப் பேசினர். இப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றி யக்குழு உறுப்பினர் கே.வசந்தி, கிளைச் செய லாளர்கள் மனோகரன், கதிர்வேல், ராஜேஷ், நரேந்திர பிரசாத் மற்றும் வாலிபர் சங்க ஒன்றி யத் தலைவர் ஜி.ரேவந்த்குமார் உள்ட்ட திர ளானோர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டம் நடந்து கொண்டிருக் கும்போதே அந்த பகுதிக்கு பொக்லைன் இயந்திரம் கொண்டு வரப்பட்டு மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக இருந்த இடத்தில் சீரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. சாலையோரம் குவித்து வைக்கப்பட்டிருந்த மண்ணை வாரி சேறாக இருந்த இடங்களில் கொட்டி சமப்படுத்தினர். போராட்டத்தின் எதி ரொலியாக அதே இடத்தில் சீரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டதை அப்பகுதி வாகன ஓட்டிகள், பொது மக்கள் பார்த்துச் சென்ற னர். அத்துடன் மண்டல உதவி ஆணையர் சுப் பிரமணியம், இளநிலைப் பொறியாளர் பிரபாக ரன் ஆகியோரும் அங்கு வந்து சீரமைப்பு பணி கள் குறித்தும், மேற்கொள்ள இருக்கும் திட் டப் பணிகள் குறித்தும் கூறினர். குறிப்பாக அவிநாசி சாலை காந்தி நகர் முதல் நல்லாறு வரை ராஜ வாய்க்கால் அமைக்கும் பணிக் காக ரூ.5 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு நிர்வாக அனும திக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனு மதி கிடைத்தவுடன் விரைவில் பணி தொடங் கப்படும் என்று தெரிவித்தனர்.
எம்எல்ஏ, மேயர் ஆய்வு
இந்த போராட்டம் நடைபெற்று முடிந்த நிலையில், சீரமைப்புப் பணிகள் நடை பெற்றுக் கொண்டிருந்தபோது, திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ கே.செல்வராஜ், மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் ஆகி யோர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து சீர மைப்புப் பணிகளை பார்வையிட்டு துரிதப் படுத்தினர். அத்துடன் இதுபோன்ற பிரச்சனை களில் நேரடியாக கவனத்திற்கு கொண்டு வந் தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கட்சியினரிடம் கூறினர்.