districts

img

சாலை அமைக்கும் பணியை சு.வெங்கடேசன் எம்.பி., ஆய்வு

மதுரை, ஜன.25- மதுரை மாநகராட்சி மண்ட லம் 2 மண்மலை மேடு  தெருவில் அமைக்கப்பட்டு வரும் தார் சாலையினை மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடே சன் ஜனவரி 25 அன்று ஆய்வு மேற்கொண்டார்.  மதுரை மாநகராட்சி பகுதி களில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் புதிய தார் சாலை கள், பேவர் பிளாக் சாலைகள் அமைக்கும் பணிகள் நடை பெற்று வருகிறது. அதன்படி மண்டலம் 2க்கு உட்பட்ட பகுதி களான மண்மலை மேடு, புதூர், டி.ஆர்.ஓ.காலனி ஆகிய பகுதி களில் ரூ.45.70 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 665 மீட்டர் நீளம் தார் சாலை அமைக்கும் பணிகள் நடை பெற்று வருகிறது. இப்பணி யினை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆய்வு மேற்கொண்டார்.  இந்த ஆய்வில் மதுரை  வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி, மாநகராட்சி ஆணையாளர் மரு.கா.ப. கார்த்தி கேயன், நகரப்பொறியா ளர் (பொ) அரசு, உதவி செயற் பொறியாளர் சேகர், உதவி பொறியாளர்கள் தியாகராஜன், சங்கிலிராஜன், உட்பட மாநக ராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். புதிய சாலைகள் அமைக்கும் போது பழைய சாலைகளை பெயர்த்து எடுத்துவிட்டு புதிய  சாலை அமைக்கும் பணியினை மதுரை மாநகராட்சி நிர்வாகம் முழுமையாக செயல்படுத்து கிறதா என்பது குறித்து மதுரை டி.ஆர்.ஓ காலனி மெயின் ரோடு பகுதியில் நடைபெற்று வரும் புதிய சாலை அமைக்கும் பணி யினை சு.வெங்கடேசன் எம்.பி.,ஆய்வு செய்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜா.நரசிம்மன், பகுதிக்குழு செயலாளர் பாலு ஆகியோர் உட னிருந்தனர்.