districts

img

சிறுபான்மை சமூகக் குழந்தைகளின் உரிமையை பறித்த மோடி அரசுக்கு எதிர்ப்பு

திண்டுக்கல், டிச.19- ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படித்துவரும் சிறுபான்மைக் சமூதாயத்தினரின் குழந்தைகளின் கல்வி உதவித்தொகையை ரத்து செய்த ஒன்றிய  பாஜக அரசைக் கண்டித்து திண்டுக்கலில் திங்களன்று மனித நேய மக்கள் கட்சியின்  மாவட்டத்தலைவர் ஷேக்பரித் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில  அமைப்புச் செயலாளர் பழனி பாரூக், நிர்வா கிகள் முகமது ரிஜால், அப்துல் அகமது,  தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு  மாநிலச் செயலாளர் வ.கல்யாணசுந்தரம், ஏ. அரபுமுகமது, எம்.கே.சம்சுதீன், ஏ.ஷாஜ கான் உட்பட பலர் கலந்துகொண்டனர். திருவில்லிபுத்தூர் தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழு சார்பில் திருவில்லிபுத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் மரிய டேவிட், ஜூம் -ஆ பள்ளிவாசல் நிர்வா கக் குழு உறுப்பினர் ஷேக் தாவூது, ரேணுகா தேவி, சிஐடியு சாலைப் போக்குவரத்து சங்க  மாவட்டச் செயலாளர் திருமலை, ஞான செல்வராஜ், ஜின்னா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.