மதுரை, அக்.9- புரட்சியாளர் சே குவேரா நினைவு தினத்தை முன் னிட்டு அக்டோபர் 9 ஞாயி றன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மதுரை மாந கரில் கிளைகள் சார்பில் அஞ் சலி நிகழ்ச்சி-உறுதியேற்பு நடைபெற்றது தெற்குவாசல் பகுதிக் குழு செயலாளர் போனி பேஸ் தலைமையில் நடை பெற்றது இதில் மதவாதம், சாதி வாத சக்திகளை முறி யடிப்போம் என்று உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். பகுதின்குழு பொருளாளர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பழங்காநத்தம் பகு திக்குழு சார்பில் பைக்காரா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பகுதிக்குழு செயலாளர் க.கௌதம் பாரதி தலைமை வகித்தார். அப்பகுதி மக்களிடம் ஸ்தல பிரச்சனைகளை முன்னெ டுத்து கையெழுத்து இயக் கம் நடைபெற்றது .
இதில் பகுதிக்குழு பொருளாளர் விஷ்ணு உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலப்பொன்னகரம் பகு திக்குழு சார்பாக முரட் டன்பத்திரி கிளையில் பகு திக்குழு தலைவர் பா. ஆசாத் தலைமையில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பகுதிக்குழு செயலா ளர் ஏ. நவீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மீனாம்பாள்புரம் பகு திக்குழு சார்பில் சக்கரை செட்டியார் படிப்பகம் அரு கில் பகுதிக்குழு செயலாளர் பிரசாத் தலைமையில் அஞ்சலி நடைபெற்றது. மாநி லத் தலைவர் எஸ். கார்த்திக், மாவட்டச் செயலாளர் டி. செல்வா, துணைச் செயலா ளர் எஸ். வேல்தேவா, மாவட்டக்குழு உறுப்பினர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அரசரடி பகுதிக்குழு சார் பில் அஞ்சலி நிகழ்ச்சி மற்றும் பெத்தானியாபுரம் பகுதியில் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூ றாக சாலையில் அமைக் கப்பட்டுள்ள கழிவு நீர் சுத்தி கரிப்பு ஆழ்துளை கிணற்றை மாற்றி அமைக்க வேண்டும், அண்ணா மெயின்வீதி பகுதி யில் உள்ள குப்பை சேக ரிப்பு மையத்தில் தினசரி குப் பைகளை அகற்ற வேண்டும். குடிநீரில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் பகுதிக் குழு துணைச் செயலாளர் அப்துல்லா தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் அ. பாவெல் சிந்தன், பகுதிக் குழு உறுப்பினர்கள் சிவா, ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.