districts

img

மழைநீரை அகற்றும் பணி தீவிரம்: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

தூத்துக்குடி, மார்ச் 8 தூத்துக்குடியில் சாலைகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். தூத்துக்குடியில் திங்கள் இரவு பெய்த திடீர் மழையால் நகரின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதையடுத்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உடனடியாக மழை நீர் தேங்கிய இடத்திற்கு சென்று மாநகராட்சி அதிகாரிகளை அழைத்து மழைநீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். மாநகராட்சி 40வது வார்டு மறக்குடி தெரு ஜான் பீட்டர் கோயில் தெருவில் தேங்கிய மழை நீரை மாநகராட்சி வாகனத்தை வரவழைத்து அகற்றும் பணிகளை அவர் பார்வையிட்டார். வார்டு கவுன்சிலர் ரிக்டா, மாநகர மீனவர் அணி துணை அமைப்பாளர் ஆர்தர் மசசாது, வட்டச் செயலாளர் டென்சிங், தொமுச மரியதாஸ், ஐடி லிங் சுரேஷ், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் சேவையா உட்பட பலர் உடனிருந்தனர்.