districts

img

ஓய்வூதியர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்குக!

நாகர்கோவில், ஜூலை 2- கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் 8 ஆவது பேரவை கூட்டம் தோழர் ஸ்டீபன் நினைவ ரங்கத்தில் நடைபெற்றது. மாதா மாதம் 1-ஆம் தேதி பென்சன் வழங்க வேண்டும், அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய டி.ஏ உயர்வு மற்றும் அரியர்ஸ் வழங்க வேண்டும், அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணி செய்து ஓய்வு பெற்றவர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும், நீதிமன்ற தீர்ப்புகளை அமல்படுத்த வேண்டும், அரசு போக்குவரத்தில் பணி செய்யும் அரசு தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள பேச்சுவார்த்தை நடத்த வேண் டும் உள்ளிட்ட போக்குவரத்து ஊழியர்கள் நலன் சார் தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கு, சங்க தலைவர் டி.பால்ராஜ் தலைமை வகித்தார். மத்திய சங்க நிர்வாகி வெங்கடாச லம், சங்க மாநில பொதுச்செயலா ளர் கர்ஸன், சங்க மாநில தலை வர் கிருஷ்ணன், மாநில துணைத் தலைவர்கள் மகாலிங்கம், ரைமண்ட், சங்க செயலாளர் சுந்தர ராஜ், சங்க பொருளாளர் செல்வ ராஜாசிங், சங்க முன்னாள் நிர்வாகி பி.சாம் தர்மராஜ், மாநில நிர்வாகக் குழு பொன்.சோபன ராஜ், லெட்சுமணன், சங்க நிர்வாகி மரிய வின்சென்ட், அனைத்து ஓய்வூதியர் கூட்டமைப்பு மாவட்டச் செயலாளர் ஐவின், சிஐடியு மாவட்டச் செயலாளர் தங்கமோகனன், நெல்லை மாவட்டச் செயலாளர் முத்து கிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர்.

;