மதுரை, மார்ச் 15- தமிழக அரசு மின்வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது, தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூ திய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மருத்துவக் காப்பீடு திட்டத்தில் உள்ள குறைகளை கலைந்திட வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு மின் வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில் செவ்வாயன்று மாநிலம் தழு விய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மதுரை புதூர் அருகில் உள்ள தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆர்.மாரிச்சாமி தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் சி.சுப்பையா விளக்கிப் பேசி னார். மாநில துணைப் பொதுச்செய லாளர் வி.பிச்சைராஜன் சிறப்புரை யாற்றினார். மாவட்ட நிர்வாகிகள் சர்தார்பாட்சா பலர் கலந்து கொண்ட னர். திருவில்லிபுத்தூர் திருவில்லிபுத்தூர் கோட்ட அலு வலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாவட்டத் தலைவர் ஆர்.சந்தியாகப்பன் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் எஸ்.செல்வராஜ், பொருளாளர் ஜி.பெருமாள்சாமி உள்ளிட்டோர் விளக்கிப் பேசினர். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு விருதுநகர் மின் திட்ட செயலாளர் வி.சந்திரன், திருவில்லிபுத்தூர் கோட்ட செயலாளர் பி.ராஜாராம் ஆகியோர் ஆதரித்துப் பேசினர். இதில், எஸ்.தங்கராஜ், கணேசன் உள்பட ஓய்வு பெற்ற ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.