இராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் , இறந்தவர்கள் குடும்பத்தார் மற்றும் குழந்தைகளுக்கு வேலை வழங்க வேண்டும். ஆளுங்கட்சி தலையீடு கூடாது. ஆளுங்கட்சி தலையீட்டில் போடப்பட்ட நியமனங்களை வாபஸ் வாங்கி நிறுவனத்தில் பணியாற்றியவர்களை மற்றும் இறந்தவர்கள் குடும்பத்திற்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி புதனன்று சிஐடியு அரசு உப்பு நிறுவன தொழிலாளர் சங்கம் சார்பாக வாலிநோக்கத்தில் அரசு உப்பு நிறுவனம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் செயலாளர் குமர வடிவேல் தலைமை வகித்தார். நிர்வாகிகள் முருகன், காட்டு ராஜா , முருகவேல் உள்பட பெருந்திரளானோர் பங்கேற்றனர்.