தென்காசி, மே 15- தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தென்காசி மாவட்ட முதல் மாநாடு சனிக்கிழமையன்று புளியங்குடியில் நடைபெற்றது. 40 பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட வர்கள் பிரதிநிதிகளாக கலந்து கொண் டனர். பேருந்து நிலையம் முன்பிருந்து பிரச்சாரம் மற்றும் பேரணி துவங்கி யது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாநில துணைத் தலைவரும் முன்னாள் எம்.எல்.வுமான எஸ்.கே. மகேந்திரன் துவக்கி வைத்தார். தொட ர்ந்து பேரணி மாநாட்டு அரங்கை வந்த டைந்தது. மாநாட்டிற்கு இரா.நடராஜன், பால்ராஜ், மேனகா ஆகியோர் தலைமை வகித்தனர். பாலு அஞ்சலி தீர்மானம் வாசிக்க வரவேற்பு குழு செயலாளர் மா.பழனிச்சாமி வர வேற்று பேசினார். தமுஎகச மதிப்புறு தலைவர் ச. தமிழ்ச்செல்வன் துவக்கி வைத்துப் பேசினார். முன்னாள் எம்எல்ஏவும் முன்னணியின் மாநிலத் துணைத் தலைவருமான எஸ் கே மகேந்தி ரன், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார், திராவிடர் தமிழர் கழகத்தின் மாவட்ட செயலாளர் வீரபாண்டியன், தமிழக ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக் கத்தின் மாவட்டச் செயலாளர் வ. வேலு, ஆதித்தமிழர் கட்சியின் சார் பில் விடுதலை வசந்தன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ச.குழந்தைவள்ளுவன் கொத்தடிமை ஒழிப்பு இயக்கத்தின் மாவட்ட செயலாளர்முப்பிடாதி, மற் றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தென்காசி மாவட்ட செயலா ளர் உ.முத்துப்பாண்டியன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முதல் மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர் மாவட்டத் தலைவராக என்.பால்ராஜ், மாவட்டச் செயலாளராக பி. கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளா ளராக வி.ஸ்டாலின் அசோக் மற்றும் 13 நிர்வாகிகள் உட்பட 29 பேர் கொண்ட புதிய மாவட்டக் குழு தேர்வு செய்யப் பட்டது. சாதி ஆணவப் படுகொலையை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் உட்பட பத்துக்கும் மேற்பட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டை நிறைவு செய்தும், புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி யும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாநில தலைவர் த.செல்லக் கண்ணு உரையாற்றினார். வர வேற்புக் குழு செயலாளர் மு.மணி கண்டன் நன்றி தெரிவிக்க மாநாடு நிறைவுற்றது. (ந.நி)
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் புளியங்குடியில் நடைபெற்ற மாவட்ட மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புளியங்குடி நகர் குழு சார்பில் ரூ.35,000ஐ கட்சியின் மாநில குழு உறுப்பினரும் முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.கே.மகேந்திரனிடம் நகரச் செயலாளர் மணிகண்டன் வழங்கினார். உடன் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் செல்லக்கண்ணு, கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அசோக்ராஜ் உள்ளிட்டோர் இருந்தனர்.