திண்டுக்கல், மே 5- திண்டுக்கல் மாவட்டத்தில் கூலிக்குக் கூட கட்டுப்படியாகா மல் சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக வீழ்ச்சிய டைந்ததால் விரக்தியடைந்த வெங்காய விவசாயி ஒருவர் டிராக்டர் மூலம் வெங்காய தோட் டத்தை அழித்தார். திண்டுக்கல் மாவட்டம் ரெட்டி யார்சத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கே.புதுக்கோட்டை கிரா மத்தில் வசிக்கும் விவசாயி தங்க பாண்டியன் தனது தோட்டத்தில் 5 ஏக்கர் வரை சின்ன வெங்கா யம் நடவு செய்துள்ளார். அறு வடை சமயத்தில் பெய்த மழை யின் காரணமாக சின்ன வெங்கா யத்தில் அழுகல் நோய் வந்ததால் அறுவடை செய்ய இயலாத நிலைக்கு தள்ளப்பட்டார். மேலும் சமீப காலமாக நான்கு மாதத்துக்கு முன் ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனையான சின்ன வெங்காயத்தின் விலை கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால் வெங்கா யத்திற்கு நல்ல விலை கிடைத்த பிறகு அறுவடை செய்து கொள்ள லாம் என்று காத்திருந்த விவசாயி தங்கபாண்டிக்கு ஏமாற்றமே மிச்ச மானது. திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் மொத்த மார்க்கெட்டிற்கு வெங் காயத்தை எழுத்துச் சென்றால் கிலோ ரூ.5க்கு வியாபாரிகள் அடி மாட்டு விலைக்கு கேட்கிறார்கள். கிலோ ரூ.5க்கு கொடு இல்லை யென்றால் எடுத்துச்செல் என்று சொன்னதால் விவசாயி தங்க பாண்டியன் மன விரக்தி அடைந் தார். 6 மாத பயிரானாலும் நல்ல லாபம் கிடைக்கும் என்ற எதிர் பார்ப்பில் விவசாயி தங்கபாண்டி யன் 5 ஏக்கர் நிலத்திற்கு இந்த முறை 5 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ததாக கூறப்படு கிறது.
இந்நிலையில், எடுப்புக் கூலிக்கு கூட கட்டுப்படியாகாத நிலையில் விரக்தியின் எல் லைக்குச் சென்ற அவர் தனது வெங்காய வயலில் விளைந்த வெங்காயத்தை டிராக்டர் கொண்டு வேதனையோடு உழு துள்ளார். நல்ல விலை கிடைக்கும் என்று காத்திருந்ததால் வெங்கா யம் பூ பூத்து விதையும் கண்டு விட்டது. மேலும் இவரது பட்டறை யில் உள்ள வெங்காயமும் அழுகி பயனற்றதாகி உள்ளது. இதனால் கடும் நஷ்டத்தைச் சந்தித்த தங்கபாண்டியன் கூறும் போது, அரசு மானியத்தில் விதை வெங்காயம் கொடுத்தது. ஆனால் அந்த விதை வெங்காயம் கூட சில விவசாயிக்கு தான் கிடைத்தது. வியாபாரிகள் திட்ட மிட்டே சிண்டிகேட் அமைத்து தங்களுக்கு தேவைப்படும் போது விற்பனை செய்வதற்காக வெங்காயங்களை வாங்க மறுப்ப தால் வெங்காயங்களின் விலை வீழ்ச்சியை அடைகிறது. வெங்காய வரத்து குறைவாக வரும் போது இருப்பு உள்ள வெங்காயங்களை அதிக விலை யை ஏற்றி விற்கப்படுகிறது. ஆனால் திண்டுக்கல் மாவட்டத் தில் விளையும் வெங்காயம் தர மானது என்பதால் சிங்கப்பூர், மலேசியா, கேரளா போன்ற வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால், இங்குள்ள விவ சாயிகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறார்கள். எனவே தமிழ்நாடு அரசு வெங்காயத்தை நேரடியாக கொள்முதல் செய்ய முன்வர வேண்டும். பாதிக்கப்பட்ட ஏழை விவ சாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி விவசாயிகளுக்கு ஓரள வுக்காகவது லாபம் கிடைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.