மதுரை, ஜூன் 5- மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் போதிய உபகரணங்கள் வழங்கா மல், பாதுகாப்பற்ற நிலையில் பணி செய்திட வைக்கும் ஒப்பந்ததாரர் களின் ஒப்பந்தங்களை ரத்து செய்திட வேண்டும் என்றும் பாதாளச் சாக் கடை-குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்படும் பள்ளங்களை உடனே சீரமைக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் வலியுறுத்தினர். மதுரை மாநகராட்சி விரிவாக்க பகுதியான விளாங்குடி சிஐடியு காலனி ராமமூர்த்தி நகரில் பாதாள சாக்கடை குழாய் பதிப்பின் போது தனியார் நிறுவன ஒப்பந்த தொழிலா ளர் சதீஷ் என்பவர் மண்சரிவில் சிக்கினார். அவரை காப்பாற்றுவதற் காக பொக்லைன் இயந்திரம் மூலம் மண் அள்ளும் போது தலை துண்டிக் கப்பட்டு கோரமாக பலியானார். இந்நிலையில் சனிக்கிழமை யன்று சம்பவம் நிகழ்ந்த பகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் மா. கணேசன், புறநகர் மாவட்ட செயலா ளர் கே. ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜா. நரசிம்மன் மற்றும் மாமன்ற உறுப்பி னர்கள் டி.குமரவேல், கே.விஜயா ஆகியோர் பார்வையிட்டு, அப்பகுதி யில் உள்ள மக்களிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தனர். அப்போது மக்கள் கூறுகையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக பாதாளச் சாக்கடை குழாய் பதிக்கும் பணி இப்பகுதியில் நடைபெற்று வருகிறது. தோண்டப்படும் பள்ளங்க ளில் பொதுமக்கள் மற்றும் கால்நடை கள் விழுகின்றனர். இதுபோன்று 20 அசம்பாவிதங்கள் நிகழ்ந்துள்ளன. இப்பணி நடைபெற்று வருவதால் பள்ளங்கள் சரியாக மூடப்படுவ தில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். தற்போது ஒரு தொழிலாளி உயிரி ழந்துள்ளார். எனவே இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க தோண்டப்படும் பள்ளங் களை உடனடியாக மூட வேண்டும். விளாங்குடி முக்கிய சாலையில் தோண்டப்பட்டுள்ள பள்ளங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அப்பகுதி மாநகராட்சி அதிகாரிகளிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் பேசினர். அவர்கள் தெரி விக்கையில், தெரு பகுதியில் பாதா ளச் சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்கு தோண்டப்படும் பள்ளங்கள் மூடப்பட்டு சாலைகளை சீரமைக்க வேண்டும். மழை பெய்து பள்ளங்கள் ஏற்பட்டால் அதை உட னடியாக சீரமைக்க வேண்டும். தொழி லாளிகளுக்கு பாதுகாப்பு உபகர ணங்கள் வழங்காமல், மண் சரிவு ஏற்படாமல் இருக்க பள்ளங்களில் தடுப்புகள் அமைக்க போதிய ஏற் பாடுகள் செய்யாமல் பணி செய்திட வைக்கும் ஒப்பந்ததாரர்களின் ஒப் பந்தங்களை ரத்து செய்ய வேண்டும். மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். என்று அதி காரிகளிடம் வலியுறுத்தினர்.