திருநெல்வேலி, நவ.2- நெல்லை மாவட்டம் சேர்ந்தான் குளம் கிராமத்தில் தனியாரால் போடப்பட்ட முள்வேலி கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் போராட்டத்தால் அகற்றப்பட்டன. நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகு திக்குட்பட்ட சேர்ந்தான் குளம் கிராமத்தில் நில ஆக்கிரமிப்பாளர்கள் பொதுமக்கள் நடமாடாத முடியாத அளவிற்கு வேலி அமைத்தும், தலித் மக்களின் சுடுகாட்டு பாதையை அடைத்தும் வைத்தனர். எனவே, சேர்ந்தான் குளத்தில் ஆக்கிர மிப்பாளர்களால் அமைக்கபட்ட முள்வேலிகளை அகற்றிடக் கோரி வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல கட்டப் போராட்டங்கள் நடத்தப் பட்டது. இந்நிலையில், செப்டம்பர் 19-ஆம் தேதி விவசாயிகள் சங்க மாநில தலைவர் பி.சண்முகம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டமும், அக்டோபர் 27-ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநி லச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் தலைமை யில் சேர்ந்தான் குளம் கிராமத்தில் வீடுகள் தோ றும் கருப்பு கொடி ஏந்தி போராட்டமும் நடை பெற்றன
. மேலும் நவம்பர் 10-ஆம் தேதிக்குள் முள்வேலிகளை அகற்றாவிட்டால், நேரடி யாக களத்தில் இறங்கி முள்வேலிகளை அகற்றுவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் புதனன்று நாங்குநேரி தாசில்தார் தலைமையில் சேர்ந்தான்குளம் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஸ்ரீராம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.சுடலைராஜ், வி.ச. மாவட்டத் தலைவர் ஆகியோர் முன்னி லையில் முள்வேலி அகற்றப்பட்டது, இதில், சிபிஎம் நாங்குநேரி ஒன்றியச் செயலாளர் பி.எம்.முருகன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் செல்லத்துரை, வி.ச. மூத்த தலைவர் என்.எஸ்.கணேசன், நாங்குநேரி ஒன்றியச் செயலாளர் ரஜினி, ராமலிங்கம், கந்தையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் அந்த பகுதி மக்களுக்கு பட்டா வழங்குவதற்கும் ஏற்பாடுகள் உடனடியாக செய்யப்படும் என நாங்குநேரி தாசில்தார் தெரிவித்துள்ளார்.
சிபிஎம் தலைவர்கள் மீது வழக்கு பதிவு
இந்நிலையில், போராட்டங்களுக்கு தலைமை யேற்று நடத்திய வி.ச தலைவர்கள் ஆறுமுகநயி னார், கனகராஜ் மீது மூலக்கரைப்பட்டி காவல் நிலையத்தில் பொய்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டக் குழு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.