districts

img

பெரியகுளத்தில் மாணவி இறப்பில் மர்மம் கல்லூரியை முற்றுகையிட்ட உறவினர்கள்

தேனி, மார்ச் 19- பெரியகுளம் அருகே தனி யார் கல்லூரியில் மாணவி மர்ம மான முறையில் இறந்ததாகக் கூறி பெற்றோர், உறவினர்கள் கல்லூரியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரியகுளத்தில் செயல் பட்டு வருகின்ற பிரபலமான தனி யார் மகளிர் கல்லூரியில் முத லாமாண்டு வேதியியல் பட்டப் படிப்பு படித்து வந்த மாணவி ஜெனிலியா கடந்த 17ஆம் தேதி அன்று கல்லூரிக்கு வந்தவர் திடீ ரென, மர்மமான முறையில் மயக்க மடைந்து கீழே விழுந்ததாக கூறப் படுகிறது.  பின்னர் கல்லூரி நிர்வாகத்தி னர், அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் அவரது, சகோ தரி பவித்ராவை அழைத்து உனது சகோதரி மயக்கம் அடைந்துள் ளார். அவரை, உடனடியாக மருத் துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறி, நிர்வாகம் சார்பில் ஆட்டோ ஒன்று ஏற்பாடு செய்து, ஆட்டோவில் ஜெனி லியாவை படுக்க வைத்து பவித்ரா துணையுடன் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். தனியார் மருத்துவமனையில் ஜெனிலியாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகக் கூறிய தாக கூறப்படுகிறது. மேலும் அவர் ள், ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் ஜெனிலியாவை உடனே தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக் காக அனுப்பியுள்ளனர். இந்த சூழ்நிலையில், பவித்ரா, பெற் றோருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் தேனி அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு ஜெனிலியாவின் உடலை அன்றே பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில், ஜெனிலியா வின் பெற்றோர் மற்றும் உற வினர்கள் நல்ல நிலையில் கல்லூ ரிக்கு அனுப்பப்பட்ட தங்களது பெண் மர்மமான முறையில் உயி ரிழந்தது தங்களுக்கு மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ள தாகவும், இது குறித்து உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி தனியார் கல்லூரி வாயிலில் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.