districts

தற்காலிக போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதியத்தை வழங்க மறுப்பது ஏற்புடையதல்ல!

மதுரை, செப்.22-  தற்காலிக அரசு போக்குவரத்து  ஊழியர்களுக்கு ஊதியத்தை தாமதிப்பது வழங்க மறுப்பது நல்ல  செயல் அல்ல என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரி வித்துள்ளது. அரசு போக்குவரத்து மதுரை  தொழிலாளர் சங்கம் (சிஐடியு) தலைவர் ஏ.கனகசுந்தர்  உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மனு  ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.  மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் 01.04.2014 முதல் 31. 01.2017 வரை செலுத்த வேண்டிய  குறைந்தபட்ச ஊதிய நிலுவைத் தொகையை தற்காலிக பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள், பணியா ளர்களுக்கு வழங்க வேண்டும், ஆனால், போக்குவரத்துக் கழகத் தில் பணியாற்றும் தற்காலிக தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதிய விகிதத்தை விடக் குறை வான ஊதியத்தை வழங்கி வரு கின்றனர்.  இதுகுறித்து கடந்த 2016-ம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, 2017-ம் ஆண்டு அரசு போக்குவரத்து கழகத்தில் தற்காலிகமாக பணியாற்றும் ஊழி யர்களுக்கு தமிழ்நாடு அரசு நிர்ண யித்த குறைந்தபட்ச ஊதிய விகி தத்தில் ஊதியம் வழங்க நீதி மன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், நீதிமன்ற உத்த ரவை முறையாக அமல்படுத்தாத தால், 2018-ம் ஆண்டு நீதிமன்ற  அவமதிப்பு வழக்கு தொடரப்பட் டது. அந்த வழக்கிலும் 2019-ம்  ஆண்டு நீதிமன்றம் 6 மாத காலத் திற்குள் குறைந்தபட்ச ஊதிய விகி தத்தின் படி, ஊதிய நிலுவைத் தொகையை வழங்க உத்தரவிடப் பட்டது. இந்நிலையில், நீதிமன்றம் உத்தரவிட்டு 4 ஆண்டுகளாகியும் தமிழ்நாடு அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதிய விகிதத்தின் அடிப்படையில் ஊதிய நிலுவைத் தொகை வழங்கவில்லை என நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்  செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி பட்டு  தேவானந்த் முன்பு வெள்ளி யன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு போக்குவரத்து கழக முன்னாள் மேலாண் இயக்கு நர் ஆறுமுகம், பொதுமேலாளர் இளங்கோவன், அதிகாரிகள் ராஜேஸ்வரன், முருகேசன் ஆகி யோர் நேரில் ஆஜராகினர்.  2016-ஆம் ஆண்டு நீதிமன்றம்  பிறப்பித்த உத்தரவை தற்போது வரை நிறைவேற்றவில்லை என தெரிய வந்துள்ளது. தற்காலிக ஊழி யர்கள் அதிகாரிகளிடம் பிச்சை கேட்கவில்லை. செய்த பணிக்கு உரிய ஊதியத்தை மட்டுமே கேட் கின்றனர். அரசு நிரந்தர ஊழியர் களும், தற்காலிக ஊழியர்களும் பேருந்துகளை இயக்கினால் மட்டும் தான் பேருந்துகள் இயங்கும். தற்காலிக பேருந்து ஓட்டுநர் களுக்கும், நிரந்தர பேருந்து ஓட்டு நர்களுக்கும் பேருந்துகளை இயக்குவதில் ஏதாவது வேறு பாடு உள்ளதா? இரு தரப்பு பணியா ளர்களும்  பொதுவாக மக்களுக் காக தான் பணியாற்றுகிறார்கள். ஆனால் தற்காலிக பணியாளர் களுக்கு ஊதிய முரண்பாடு உள்ளது. எல்லா பணியாளர்களும் ஒரே மாதிரி தான் பேருந்துகளை இயக்குகின்றனர். பணியை முறை யாக செய்த ஊழியர்களுக்கு ஊதி யத்தை வழங்காமல் காலம் தாழ்த்துவது ஏற்புடையதல்ல.

பேருந்துகளை விற்று பணம் கொடுக்க வேண்டியதுதானே?

 பணியாற்றிய ஊழியர்களுக்கு ஊதியத்தை வழங்க நிதி பற்றாக் குறையை காரணமாக கூறுவதா? நிதி இல்லையென்றால் பேருந்து களை விற்று பணம் கொடுக்க வேண்டியது தானே? நீதிமன்றத்தை  ஏமாற்ற நினைக்காதீர்கள். நீதி மன்றத்திற்கு சக்தி இல்லை என கருதாதீர்கள். நீதிக்காக நீதிமன்றங்கள் எப் போதும் தொடர்ந்து இயங்கும். விடு முறை நாட்களிலும் கூட நீதிமன்றங் கள் முக்கியமான வழக்குக்காக நடைபெறுகிறது. அதை போல  தான் போக்குவரத்துத் துறையில்  பேருந்துகளை எல்லா நாட்களிலும்  மக்களுக்காக ஊழியர்கள் இயக்கு கிறார்கள். மேலும் அவர்களுக்கு ஊதி யத்தை தாமதிப்பது வழங்க மறுப்பது நல்ல செயல் அல்ல என  கருத்து தெரிவித்து, நீதிமன்ற உத்த ரவை நிறைவேற்றாத அதிகாரி களை சிறைக்கு அனுப்ப நேரிடும்.  நீதிமன்ற உத்தரவுகளை மதிக்க வும், அதனை உடனுக்குடன் நிறை வேற்றுங்கள். நீதித்துறை மீதான  மக்களின் நம்பிக்கை என்பது நீதி மன்ற உத்தரவுகளை அதிகாரிகள்  நிறைவேற்றும் விதத்தில் தான் உள்ளது என குறிப்பிட்டு வழக்கின்  தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் வழக்கறிஞர் ராகுல் ஆஜரானார்.