சின்னாளபட்டி, ஏப்.19- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பாளையன்கோட்டை ஊராட்சி யில் தொடர்ந்து 100 நாள் வேலைத்திட்டத்தில் குளறுபடி கள் முறைகேடுகள் நடைபெறுவ தாக புகார் எழுந்துள்ளது. கடந்த 6 ஆம் தேதி பயனாளி களுக்கு அடையாள அட்டை வழங்க ஒரு குடும்பத்திற்கு இரண்டு வரி விதித்ததால் பொது மக்கள் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் திட்ட இயக்குநர் விசா ரணை செய்து முறையாக பயனா ளிகளுக்கு அடையாள அட்டை வழங்க உத்தரவிட்டார். ஆனால், தொடர்ந்து முறை கேடுகள் நடைபெற்று வருவதா லும், பயனாளிகளுக்கு அடை யாள அட்டை வழங்க மறுத்த தாலும், மீண்டும் மக்கள் பாளை யன்கோட்டை ஊராட்சிக்கு வந்த அரசு பேருந்தை சிறைபிடித்து முற்றுகையில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தட்சணாமூர்த்தி (வ.ஊ) மற்றும் ஏழுமலை (கி.ஊ) துணை வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ஊராட்சி மன்றத் தலைவர் அழகுமலை வந்த வுடன், அனைவருக்கும் 100 நாள் வேலைக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. தொடர்ந்து 100 நாள் வேலைத்திட்டத்தில் பிரச்சனைகள், குளறுபடிகள் ஏற்பட்டுவருவதால் பாளை யன்கோட்டை ஊராட்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தை முடக் கமா என பயனாளிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.